லக்னோ : உ.பி.,யில், முன்னாள் முதல்வர் மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஆர்.கே.சவுத்திரி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிரடியான அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன. உ.பி.,யின் முக்கிய எதிர்க்கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த, மூத்த தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து, தற்போது மற்றொரு மூத்த தலைவரான சவுத்திரியும், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்பவர்களிடம், மாயாவதி பணம் பெறுகிறார். அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே, 'சீட்' கொடுக்கிறார்; தொகுதிகளை ஏலம் விடுகிறார். கட்சியில், உண்மையாக உழைப்பவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது,'' என்றார். இதனால், மாயாவதிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE