பதிவு செய்த நாள் :
மத்திய அமைச்சர்களில் 72 கோடீஸ்வரர்கள்:
ரூ.113 கோடியுடன் அருண் ஜெட்லி முதலிடம்

புதுடில்லி:சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 78 ஆக உயர்ந்தது; இதில், 72 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

 மத்திய அமைச்சர்களில் 72 கோடீஸ்வரர்கள்:ரூ.113 கோடியுடன் அருண் ஜெட்லி முதலிடம்

டில்லியைச் சேர்ந்த ஜனநாயக மறுமலர்ச்சிக் கான சங்கம் என்ற அமைப்பு, அமைச்சர்கள் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள்:
* புதிய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு, 8.73 கோடி ரூபாய். ஒவ்வொரு அமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு, 12.94 கோடி ரூபாய்

* புதிய அமைச்சர்களில் மிகப் பெரும் பணக்காரரான எம்.ஜே. அக்பருடைய சொத்து மதிப்பு, 44.90 கோடி ரூபாய்
* மொத்த சொத்து மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்ளவர்கள், 9 பேர். இதில், 113 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
* அவருக்கு அடுத்த இடங்களில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், 108 கோடி ரூபாய், மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், 90 கோடி ரூபாய் சொத்து மதிப்பை அறிவித்து உள்ளனர்
* புதிய அமைச்சர்களில், ஏழு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதன் மூலம், கிரிமினல் வழக்கு உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை, 24 ஆக உயர்ந்துள்ளது
* அமைச்சர்களில் மூன்று பேர், 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 44 பேர், 41 முதல் 60

Advertisement

வயது பிரிவையும், 31 பேர், 61 முதல் 80 வயது பிரிவையும் சேர்ந்தவர்கள்

Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூலை-201619:07:26 IST Report Abuse

Endrum Indianஇங்கே நேத்து குடிசையில் இருந்த கவுன்சிலர் இன்று அந்த இடத்தில் 4 மாடி கட்டிடம் கட்டிவிட்டான். அப்படி இருக்கும் போது எம்.பி கோடீஸ்வரன் என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கி 100 க்கணக்கான கோடி சொத்துக்கள் எப்படி வாங்க முடியும். ஏன் வருமான வரி அலுவலகம் சம்பளம்= உண்ணும் செலவு+ வாங்கிய சொத்துக்கள் என்று அறிவதில்லை. பெனாமி என்றால் கூட அவனையும் கேட்க வேண்டியது தானே? இப்படிச்செய்தால் அவர்களே மாட்டிக்கொள்வார்கள் என்று நினைக்கின்றார்கள். உயர்ந்த பதவியில் இருக்கும் யாராயினும் லஞ்சம் வாங்காமல் கோடி கோடியாக சொத்து நிச்சயமாக சேர்க்க முடியாது.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-ஜூலை-201614:23:09 IST Report Abuse

Nallavan Nallavanஏன்யா வரமாட்டான் இந்த ஆளு முதலிடத்துக்கு ???? இது பத்தாது அருண் ஜெட்லீ ..... இன்னும் தீயா வேலை செய்யணும் .... ஓகேவா ????

Rate this:
mvsrinivasan srinivasan - chennai,இந்தியா
09-ஜூலை-201614:11:00 IST Report Abuse

mvsrinivasan srinivasanஅட பாவமே

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X