கலகலக்கிறது வாசனின் த.மா.கா., : அடுத்தடுத்து ஓடும் நிர்வாகிகள்
கலகலக்கிறது வாசனின் த.மா.கா., : அடுத்தடுத்து ஓடும் நிர்வாகிகள்

கலகலக்கிறது வாசனின் த.மா.கா., : அடுத்தடுத்து ஓடும் நிர்வாகிகள்

Added : ஜூலை 24, 2016 | கருத்துகள் (10) | |
Advertisement
மாவட்ட தலைவர்கள், 16 பேர், மாநில நிர்வாகிகள், 13 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர் த.மா.கா.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைய விருப்ப கடிதம் அளித்துள்ளனர்.சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், த.மா.கா., 26 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு முன், கட்சியின் மூத்த தலைவர்கள்
கலகலக்கிறது வாசனின் த.மா.கா., : அடுத்தடுத்து ஓடும் நிர்வாகிகள்

மாவட்ட தலைவர்கள், 16 பேர், மாநில நிர்வாகிகள், 13 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர் த.மா.கா.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைய விருப்ப கடிதம் அளித்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், த.மா.கா., 26 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு முன், கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் வெளியேறினர். தேர்தல் முடிந்த பின், த.மா.கா., மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் வெளியேறி, அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில், வாசனின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் மற்றும் கோவை மகேஸ்வரி ஆகியோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருப்பூர், வேலுார் உட்பட, 16 மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், 13 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், வாசனின் கூடாரத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ஒருவர் மூலமாக, கட்சியில் சேருவதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருப்ப கடிதமும் வழங்கியுள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

Krish Sami - Trivandrum,இந்தியா
25-ஜூலை-201622:54:00 IST Report Abuse
Krish Sami எல்லோரும் ஓடுகிறார்கள், சரி. வாசன் எப்போது ஓடுவார்? ஓடுவார், சரி. எங்கே ஓடுவார்?
Rate this:
Cancel
ppmkoilraj - erode.10,இந்தியா
25-ஜூலை-201622:09:15 IST Report Abuse
ppmkoilraj தேர்தலுக்கு முன் காங்கிரசை பலவீனப்படுத்த பாஜக செய்த சூழ்ச்சி மற்றும் அதிமுக கொடுத்த மறைமுக ஆதரவுதான் வாசன் கடைசி வரையில் அதிமுக வாசலில் காத்திருந்தது .அதிமுக ,பாஜக .வாசன் ஆகியோரைக்கொண்ட கூட்டணியை தான் வாசன் விரும்பினார் .அப்படி ஏற்படலாம் நம்ம ஆட்கள் ஓரளவு எம் எல் ஏ க்கள் ஆகிவிட்டால் கங்கைராசை விட நாம் தான் பலம் பொருந்திய கட்சி என்பதை ஸ்டான்ட் பண்ணிக்கலாம் என்று வாசன் கணக்கு போட்டார் .ஆனால் அதிமுக எதிர்பார்த்த படை காங்கிரசில் இருந்து ,வாசனால் கட்சியை பிளவுப்டுத்தி ஆட்களை சேர்க்க முடிய வில்லை .இதனால் அதிமுக வாசனை காய் கழுவ நினைத்தது .இருப்பினும் காங்கிரசில் இருந்து வெளி வந்துட்ட்டார் நாமும் ஒரு காரணம் என்பதால் நம் சின்னத்தில் நிற்கட்டும் என்று 5 சீட்டும் இரட்டை இலையில் நின்றால்7 சீட்டும் பேசப்-பட்டது .இதனால் அதிர்ச்சி அடைந்த வாசன் .இரண்டு டெசிஷனில் ஏதாவது ஓன்று எடுத்தாலே கட்சி அவுட்என்பது உறுதி .மேலும் வாசனோ .அதிமுக வோடு கூட்டுவைத்து எம் .எல் .ஏ . ஆக்குகிறேன் என்று ஆசைகாட்டியே பலரை காங்கிரசில் இருந்து பிரித்தார் வாசன் .இது நடக்காமல் போனவுடனே அதிர்ச்ச அடைந்த பலர் இப்போது எதிர்காலம் என்ற ஓன்று இல்லாத வாசனிடம் இருப்பதை விட அதிமுக காங்கிரசில் சேருவது மேல் என்று உணர ஆரம்பித்து கட்சி மாறி வருகின்றனர் .
Rate this:
Cancel
Punithan - covai,இந்தியா
25-ஜூலை-201616:09:51 IST Report Abuse
Punithan எல்லோரும் ஓடிப் போன பின் , அரசியல் பற்றிப் பேசாமல், வை கோவிடம் மட்டும் நன்றி சொல்லிவிட்டு, பாக்கு வியாபாரம் செய்யப் போகலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X