வருவாய் ஈட்ட தெரியாமல் திண்டாடுது அரசு: துரைமுருகன்
வருவாய் ஈட்ட தெரியாமல் திண்டாடுது அரசு: துரைமுருகன்

வருவாய் ஈட்ட தெரியாமல் திண்டாடுது அரசு: துரைமுருகன்

Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை:''புதிய வருவாய் வழிமுறைகள் தெரியாமல், தமிழக அரசு தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட் தயாரித்து, கடனில் திண்டாடி வருகிறது,'' என, சட்டசபையில் தி.மு.க., குற்றஞ் சாட்டியது. திண்டாட்டம்:சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: இந்த அரசு, வருவாயை பெருக்கும் வழிமுறைகள் தெரியாமல், கடனில் சிக்கி திண்டாடி வருகிறது. 2014 - 15ல், 27,350 கோடி ரூபாயாக இருந்த

சென்னை:''புதிய வருவாய் வழிமுறைகள் தெரியாமல், தமிழக அரசு தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட் தயாரித்து, கடனில் திண்டாடி வருகிறது,'' என, சட்டசபையில் தி.மு.க., குற்றஞ் சாட்டியது.


திண்டாட்டம்:சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: இந்த அரசு, வருவாயை பெருக்கும் வழிமுறைகள் தெரியாமல், கடனில் சிக்கி திண்டாடி வருகிறது. 2014 - 15ல், 27,350 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 31,870 கோடி ரூபாயாக அதிகரித்து, இந்த நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளது.


பற்றாக்குறை பட்ஜெட் தவறானதல்ல. நல்ல திட்டங்களுக்கு செலவிடுவதால் ஏற்படும் பற்றாக்குறை பட்ஜெட்டை, நல்ல பட்ஜெட் இல்லை என, சொல்ல முடியாது. ஆனால், அதை ஈடுகட்ட வருவாயை பெருக்கும் வழிமுறைகளை அரசு கண்டறிய வேண்டும். உ.பி.,யில், 37,750 கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறையும், மஹாராஷ்டிராவில், 14,150 கோடியாக இருந்த பற்றாக்குறையும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் குறைக்கப்பட்டு உள்ளது.


பற்றாக்குறை:ஆனால், தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறை தெரியாததால், தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டு வருகிறது. அவர்கள் செய்ததை, தமிழகத்தால் ஏன் செய்ய முடியவில்லை? இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

Chandramoulli - Mumbai,இந்தியா
29-ஜூலை-201613:32:23 IST Report Abuse
Chandramoulli உங்கள் கட்சி ஆட்சி செய்த போது பற்றாக்குறை பட்ஜெட் தானே போட்டீர்கள். அப்போது வாயை பொத்தி கொண்டு இருந்து விட்டு இப்போது இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல வந்ததின் எண்ணம் என்ன ????
Rate this:
raja kannan - Newyork,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201623:00:41 IST Report Abuse
raja kannanஅப்ப கடன் எவ்ளோ இப்ப கடன் எவ்ளோ. நீங்கள் வாய் பொத்தி கொண்டு இருக்க வேண்டும்....
Rate this:
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
29-ஜூலை-201608:38:57 IST Report Abuse
Renga Naayagi ஜெகத் ரக்ஷகன் போன்ற ஏழைகள் அரசாங்கத்துக்கு உதவலாமே
Rate this:
raja kannan - Newyork,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201623:01:13 IST Report Abuse
raja kannanமிடாஸ் உரிமையாளர் கூட உதவலாமே....
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
29-ஜூலை-201605:51:03 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஊதாரி செலவீனங்களை குறைத்து.. வரி ஏய்ப்புக்கள் ஊழல், இவற்றை களைந்து ஆட்சி செய்தாலே கடன் வாங்காமல் ஆட்சி செய்யலாம்.. நடக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X