பதிவு செய்த நாள் :
பருப்பு விலை குறைவது எப்போது
பிரதமருக்கு ராகுல் கேள்வி

புதுடில்லி:அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது:

 பருப்பு விலை குறைவது எப்போது: பிரதமருக்கு ராகுல் கேள்வி

மத்தியில், தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறுகிறது.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி, போலியான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். பருப்பு

குறையும் தேதியையும் அவர் அறிவிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாட்டின் காவல்காரனாக என்னை நியமியுங்கள்' என்றார். ஆனால், இப்போது,காவல்காரன் பதில் பேச மறுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

ஜெட்லி பதிலடி:

பிரதமர் மோடியை தாக்கி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசிய போது அவர் சபையில் இல்லை; பின், விவாதத்தில் பங்கேற்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பணவீக்கத்தை, மோடி அரசு குறைத்துள்ளது. பருப்பு விலை உயர்வு கவலையளிக்கக் கூடியது தான். ஆனால், தேவைக்கும், 'சப்ளை'க்கும் உள்ள இடைவெளியை குறைக்க, அரசு,பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சவால்கள் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மத்திய அரசு பின்பற்றி வரும் கொள்கைளால் அன்னிய

Advertisement


தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஹர் ஹர் மோடி,கர் கர் மோடி - எங்கும் மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மோடி' என்று கோஷமிட்டீர்கள். தற்போது ஒரு கிராமங்களிலும், 'அர்ஹார் மோடி - துவரம் பருப்பு வேண்டும் மோடி' என்ற கோஷம் எழுந்துள்ளது.
ராகுல், காங்., துணைத் தலைவர்

Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
31-ஜூலை-201612:09:12 IST Report Abuse

Barathanஉண்மையை சொன்னால் தினமலருக்கு கோபம். ஏனெனில் தினமலர் பிஜேபி யின் ஜால்றா இது மக்களுக்கு தெரியும். பத்திரிகை தர்மம் என்பது நடு நிலையை காப்பாற்றி நடு நிலையுடன் பிரசுரிக்க வேண்டும்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
30-ஜூலை-201611:37:05 IST Report Abuse

Barathanஇந்தியாவின் பருப்பு விலை சப்ளை தேவையயை (Supply and demand curve) பொறுத்தது அல்ல. மாறாக பதுக்கல் மற்றும் தேவையை பொறுத்து விலை நிர்ணயிப்பதால், விலை கட்டுக்குள் இல்லாமல் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகின்றது. இதைத்தான் பிரைஸ் ஸ்பைரலிங் என்று சொல்வாராகள். இந்தியாவில் monopoly மார்க்கட்டுமில்லை, oligopoly மார்கெட்டுமில்லை. எல்லாமே போலி மார்க்கெட்டுதான். MRP யும் பொழிந்தான். முடிவில் பாமர மக்கள்தான் இந்த பருப்பு விலை உயர்வால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். வியாபாரி பன்மடங்கு லாபம் ஈட்டுகிறான் உணவை/பருப்பை உற்பத்தி செய்யும் விவசாயி ஓட்டாண்டியாகின்றான்/உயிரையும் விடுகிறான். இதுதான் உண்மை

Rate this:
Thulasiraman Ramanujam - Bangalore,இந்தியா
29-ஜூலை-201619:26:54 IST Report Abuse

Thulasiraman RamanujamIt will come down when rahul family cultivate it

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X