ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு
ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு

ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு

Added : ஜூலை 30, 2016 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி:அரசின் நலத் திட்ட உதவிகள்,ஒருவருக்கு ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.ஆதார் எண் இல்லை என்பதை காரணம்காட்டி, அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, ராஜ்யசபா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதற்கு மறுப்பு தெரிவித்து,
 ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு

புதுடில்லி:அரசின் நலத் திட்ட உதவிகள்,ஒருவருக்கு ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஆதார் எண் இல்லை என்பதை காரணம்காட்டி, அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, ராஜ்யசபா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.


இதற்கு மறுப்பு தெரிவித்து, அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:நாடு முழுவதும் இதுவரை 103 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையைப் பெறாதவர்களின் பெயர்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் எண் அளிக்கப்படும் வரை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகள் மாற்று வழிகளில் வழங்கப்படும்.


ஆதார் அட்டை மூலம் ஊழல் ஒழிக்கப்படும். அத்துடன், அரசு அளித்துவரும் மானியத் தொகைகள், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

Jaffarali Rahimkhan - nagarcoil,இந்தியா
30-ஜூலை-201616:18:21 IST Report Abuse
Jaffarali Rahimkhan ஆதார் என்ற திட்டத்தின் மூலம் கடும் கொள்ளை நடக்கின்றது. ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் கலெக்டர் அலுவலகம் போனால் அட்டை தாரர் மட்டுமே வரவேண்டும்.குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் போய் கேட்டால் கொடுப்பதில்லை.பிளாஸ்டிக் கார்டு என்ற பெயரில் 30 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.இ மையங்கள் ப்ரோக்கர் ஆபீஸ் ஆகிவிட்டது.விரல் அல்லது கண் ஒத்து போனால் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார்கள். வயதானவர்களை அலைக்கழிக்கிறார்கள்.
Rate this:
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
30-ஜூலை-201610:09:28 IST Report Abuse
எல்.கே.மதி அரசின் நலத் திட்ட உதவிகள், ஒருவருக்கு ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.ஆனால் எனக்கு இன்னும் ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. சென்றமாதம் எரிவாயு சிலிண்டர் முழு தொகை கொடுத்து வாங்கியுள்ளேன்.ஆதார் அட்டை விவரத்தை எரிவாயு வினியோக்கத்தாரிடம் பதிவு செய்தால் தான்,மானியத் தொகை எனது வங்கிக்கணக்கு செலுத்தப்படும் என்று எனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. வெட்கக்கேடான அமைச்சரின் அறிக்கை சிரிப்பைத்தான் வரவழைக்கிறது" ஆதார் எண் அளிக்கப்படும் வரை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகள் "மாற்று" வழிகளில் வழங்கப்படும்" என்றால் லஞ்சம் கொடுத்து வாங்க வழி வகுக்கத் திட்டமா?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
30-ஜூலை-201609:44:08 IST Report Abuse
Chandramoulli ஆதார் கார்டு விலாச மாற்றம், மொபைல் போன் மாற்றம் அவற்றையும் உரிய நேரத்தில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். அரசு அலுவலகம் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்தும் நடவடிக்கை கிடையாது . விரைந்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
30-ஜூலை-201620:53:20 IST Report Abuse
Sathya Dhara திரு சந்திரமௌலி அவர்கள் மிக சரியாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். லக்ஷ்க்கணக்கில் சம்பளம் வாங்கும் இலாகா....ஒழுங்காக வேலை செய்வதற்கு வக்கில்லயா......முகவரி மாற்றம் செய்து பல மனுதாரர்கள் வேண்டுகோள் கிடப்பில் கிடக்கின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X