புதுடில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளது. சீருடையை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி ஏற்றுள்ளார்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டிசைனை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி ஏற்றுள்ளார். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், நான்கு விதமான டிசைன்களை அவர் வடிவமைத்துள்ளார்.
விரைவில் ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் அவை வெளியிடப்பட்டு, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். பின் இறுதி செய்யப்படும் டிசைனை அடிப்படையாக கொண்டு புதிய சீருடைகள் தயாரிக்கப்படும். முதல்கட்டமாக 5 லட்சம் ஊழியர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்படவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE