அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மின்சார துறையை குட்டிச்சுவராக்கிய தி.மு.க.,:
சட்டசபையில் ஜெ., கடும் குற்றச்சாட்டு

சென்னை:''தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மின்சார துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து, அந்தத் துறையையே குட்டிச் சுவராக்கினர்,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மின்சார துறையை குட்டிச்சுவராக்கிய தி.மு.க.,: சட்டசபையில் ஜெ., கடும் குற்றச்சாட்டு

சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:
நான் சபைக்குள் வந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., ரங்கநாதன் பேசிக் கொண்டிருந்தார். அவர், 'தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றொரு மாயத் தோற்றத்தை, நீங்கள் ஏற்படுத்த பார்க்கிறீர்கள்' என்றார். நாங்கள், அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வில்லை.

மத்திய மின்சார குழுமம், தமிழ்நாடு, மின்சார உற்பத்தியில் உபரி மாநிலம் என, திட்ட வட்டமாக தெரிவித்திருக்கிறது.

இது, இந்தியாவில் உள்ள, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பை படித்திருந்தால், தமிழ்நாடு, மின்மிகை மாநிலமா, இல்லையா என்ற குழப்பம், அவருக்கு வந்திருக்காது. 2010ல், சராசரியாக ஒரு நாளைய மின் பயன்பாடு, 20 கோடி யூனிட்அளவாக இருந்தது. இந்த ஆண்டு, 30 கோடி யூனிட் அளவாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல், 29ல், உச்சகட்ட மின் தேவையான, 15 ஆயிரத்து, 343 மெகாவாட் அளவையும், உச்ச மின் பயனீட்டளவான, 34.16 கோடி யூனிட்டையும், மின் வாரியம் பூர்த்தி செய்தது.

இது தவிர, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட, மின் தேவை, மின் உற்பத்தி சமன்பாட்டு அறிக்கையில், '2016 - 17ல், தமிழகம், 1,165 கோடி யூனிட் அளவிற்கு, கூடுதலாக உற்பத்தி செய்து, மின் மிகை மாநிலமாக திகழும்' என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சி இருந்த போது, மின்சாரத் துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து, மின்சாரத் துறையையே குட்டிச் சுவராக்கினர்.

அவர்கள் செய்தது எல்லாம் தவறு. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 முதல், 2016 வரை, தி.மு.க., செய்த தவறுகளை எல்லாம் சரி

Advertisement

செய்தோம்.இருட்டில் மூழ்கியிருந்த தமிழகத்தை, நாங்கள் ஒளிபெறச் செய்தோம்; ஒளிமயமான மாநிலம் ஆக்கினோம். இன்றைய தினம், மின்சாரத் துறை சம்பந்தமாக, எதிர்க்கட்சியினர் என்ன குற்றச்சாட்டு சொல்ல நினைத்தாலும், என்ன பழி போட நினைத்தாலும், அது நடக்கவில்லை.

ஏனென்றால், தவறு முழுவதும் அவர்கள் பக்கம் உள்ளது. சரி செய்த சாதனைகள் எல்லாம், எங்கள் பக்கம் இருக்கிறது. அதனால், எல்லா வற்றுக்கும் மின்துறை அமைச்சர் சரியான பதிலடி கொடுப்பதால், அதற்கு மேல் இங்கே இருக்க மாட்டார்கள் என்று எதிர் பார்த்தேன். அதன்படி, அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
05-ஆக-201620:10:15 IST Report Abuse

Ramalingam Gurusamyமுன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களையும், லஞ்ச லாவண்களையும் பிரச்சாரம் செய்து, அவைகளை உணர்ந்த மக்கள் நல்லவர்கள் என நம்பி ஓட்டளித்து ஆட்சியை மாற்றுகிறார்கள். முந்தய ஆட்சியாளர்களின் திருவிளையாடல்களுக்கும், அவர்களின் தகிடுத்த்தங்களுக்கு தண்டித்து, அவர்கள் ஏற்படுத்திய நாசகேடுகளை திருத்தி அமைப்பதற்கு, அனுபவமுள்ள புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆண்டே போதுமானது, தங்கள் கையாகாலாகத்தனத்தை மறைப்பதற்கு தங்கள் ஆட்சிக்கு காலம் முழுவதையும் முன்னாள் ஆட்சியாளர்களை தூற்றுவதற்கே பயன்படுத்தும் ஆட்சியாளர்களை தமிழக மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதில்லை என்பது தமிழக வரலாறு. கல் கிடைத்தும் நாயை தடவிச் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள் யாருக்கும் உதவாத வீணர்களே.

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
04-ஆக-201621:57:18 IST Report Abuse

சுந்தரம் தமிழக மின்வாரியத்துல சீன நெடுஞ்சுவர் கட்டுனது யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா, 1971 ல எண்ணூர் அனல் மின் நிலையத்துல வேலை வாங்கி தரேன்னு 6 மாச சம்பளம் பேரம் பேசி மதுரை பாரத் லாட்ஜ் ல ரூம் போட்டதுல ஆரம்பிச்சு சூப்பர்வைசர் தெர்மல் னு ஒரு பதவியை உருவாக்கி நூறு பேருக்கு குறுக்கு வழியில துட்டு வாங்கிகிட்டு பதவி உயர்வு கொடுத்ததுலேந்து மேட்டூர் ல அனுபவமே இல்லாத பி ஜி ஆர் கம்பெனிக்கு அனல்மின் நிலையமே கட்ட காண்டிராக்ட் கொடுத்தது வரைக்கும் வேற யாருக்கும் பங்கு கொடுக்காம கூட்டணி சேர்க்காம மின்வாரியத்தை குட்டிச்சுவராக்கிய மொத்த பெருமையும் நம்ம கலைஞர் குடும்பத்தை (திமுக) மட்டுமே சாரும்.

Rate this:
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
04-ஆக-201621:45:27 IST Report Abuse

Subramaniyan Balachandranபாஜக ஆளும் எந்த மாநிலத்தில் (குஜராத் தவிர ) மதுவிலக்கு இருக்கிறது ? காங்கிரஸ் ஆளும் ஏதாவது மாநிலத்தில் மதுவிலக்கு இருக்கிறதா ? அப்படி இருக்கும்போது தமிழகத்தில் 1991,2001,2011- ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றபோது ஏன் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்று கேட்பது பெரிய நகைச்சுவை தான். இந்திரா காங்கிரஸ்காரனின் யோக்கியதை நாடே அறிந்த விஷயம். இந்திரா காங்கிரஸ் அரசாண்ட எல்லா மாநிலங்களிலும் ( அதாவது குஜராத் தவிர )கள், சாராயம் சக்கைப்போடு போட்டது. இந்திரா காங்கிரசுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜகவும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கை அமல் செய்ய முடியவில்லை. எனவே தங்கள் கேள்வி எவ்வித பொருத்தமும் இல்லை.

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X