பதிவு செய்த நாள் :
கிரிமினல் வழக்குகளுடன்
34 சதவீத அமைச்சர்கள்!

புதுடில்லி:அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 609 மாநில அமைச்சர்களில், 34 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

 கிரிமினல் வழக்குகளுடன் 34 சதவீத அமைச்சர்கள்!

டில்லியைச் சேர்ந்த, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு, தேர்தல் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின், 620 அமைச்சர்களில், 609 பேர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
* இதில், 34 சதவீத அமைச்சர்கள், அதாவது, 210 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன
* இதில், 113 பேர் மீது கொலை, கொலை

முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான வழக்குகள் >உள்ளன
* கிரிமினல் அமைச்சர்களில், 18 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. பீஹாரில், 11 பேர், தெலுங்கானாவில், 9 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது
* கிரிமினல் வழக்கு உள்ளஅமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு, 9.52 கோடி ரூபாய். கிரிமினல் வழக்கு இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பு, 8.10 கோடி ரூபாய்
* மொத்தமுள்ள, 609 அமைச்சர்களில், 76 சதவீதம் பேர், அதாவது, 462 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு, 8.59 கோடி ரூபாய்
* ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் பொன் குரு நாராயணா, 496 கோடி ரூபாய் சொத்து களுடன், கோடீஸ்வர அமைச்சர்களில் முதலிடத் தில் உள்ளார். கர்நாடகாவின் காங்., அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, 251 கோடி ரூபாய் சொத்து உள்ளது
* அதிக சொத்து மதிப்புள்ளகோடீஸ்வர அமைச்சர் கள் உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள, 20 கோடீஸ்வர அமைச்சர்களின் சராசரி சொத்து, 45.49 கோடி ரூபாய். கர்நாடகாவின், 31 அமைச்சர்களின் சராசரி சொத்து, 36.96 கோடி ரூபாய். அருணாச்சல

Advertisement

பிரதேசத்தின், 7 அமைச்சர்களின் சராசரி சொத்து, 32.62 கோடி ரூபாய்
* மிகவும் குறைந்த சொத்துள்ள அமைச்சர்கள், திரிபுராவில் உள்ளனர். இங்குள்ள, 12 அமைச்சர் களின் சராசரி சொத்து, 31.67 லட்சம் ரூபாய்
* அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி யில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள். கர்நாடகாவில், 97 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்
* மொத்தமுள்ள அமைச்சர்களில், 51 பேர் பெண்கள். ம.பி.,யில் தான், அதிக பெண் அமைச்சர்கள் உள்ளனர். அதற்கடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
06-ஆக-201616:30:02 IST Report Abuse

Balajiதமிழக அமைச்சர்கள் இந்த லிஸ்ட்ல வரவே இல்லையே..... இது எதனால் என்று புரிந்து கொள்ள முடியாமல் இல்லை..... ஆனால் டில்லியில் இருக்கும் அமைப்பு கூட அம்மையாருக்கு பயந்து செய்தியை வெளியிடுகிறார்களா என்று யோசிக்க வைக்கிறது..... இதை கட்சிகளிடம் கேட்டால் மக்கள் தானே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று மக்களின் மீதே பழியை சுமத்திவிட்டு போய் விடுவார்கள்........ என்னமோ நல்லா இருந்தா சரிதான்.....

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
06-ஆக-201612:01:28 IST Report Abuse

Ramaswamy Sundaramஇந்த செய்தி தெரிவிக்கும் உண்மை என்ன? தமிழக அமைச்சர்களில் யார்மீதும் கிரிமினல் வழக்கு இல்லை.....யாரும் கோடீஸ்வரர்கள் இல்லை....இப்படிப்பட்ட தனிச்சிறப்பு அம்மா அவர்களின் அமைச்சரவைக்கு உள்ளதே....தமிழர்கள் அனைவரையும் தலை நிமிர் செய்யும் உண்மை இது....நல்லவேளை திருட்டு கூட்டம் ஆட்சியில் இல்லை.... இருந்திருந்தால்.. . கேப்மாரிகள்.... துச்சாதனர்கள் ...அடித்து பிடுங்கும் அல்டாப் ரவுடிகள் என்று ஜகா ஜகா என்று ஒரு கூட்டமே அமைச்சர்கள் ஆகி இருந்து இருக்கும்....அதில் டாப் திருட்டு குவளையாக இருந்து இருக்கும்.... ஆண்டவனுக்கு நன்றி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-ஆக-201611:50:21 IST Report Abuse

Pugazh Vகையாலாகாமல் பரிதாபமாக இருக்கிற துறை இந்தியாவில் நீதித் துறை. அது புரையோடிப் போனதற்கு நீதி அரசர்கள் தான் முழுக்க காரணம்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X