பதிவு செய்த நாள் :
lநீதிபதிகள் நியமனம் , அரசு மெத்தனம் ,சுப்ரீம் கோர்ட் ,குட்டு, கண்டிப்பு

புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.

lநீதிபதிகள் நியமனம் , அரசு மெத்தனம் ,சுப்ரீம் கோர்ட் ,குட்டு, கண்டிப்பு

ஐகோர்ட்டுகளுக்கான, 75 நீதிபதிகள் நியமனம் மற்றும் பணி இடமாற்றம் தொடர்பாக அளித்த பட்டியலுக்கு ஒப்புதல் தராமல், எட்டு மாதங் களாக இழுத்தடிப்பு செய்வதை சகித்துக் கொள்ள முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோர்ட்டுகளில், அதிக அளவில் வழக்குகள் தேங்கியுள்ளதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ஏ.எம்.கன்வல்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவு:

நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்டுகளில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 43 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ஐகோர்ட்டுகளில், 40 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில், பல்வேறு ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி

பணியிடங்களை நிரப்பவும், பணி இடமாற்றம் செய்யவும், 'கொலீஜியம்' என்ற, நீதிபதிகள் குழு அளித்த, 75 பேரின் பரிந்துரைகள் மீது, மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதித்துறையின் பணிக்கு இடைஞ்சல் ஏற்படுத் தும் வகையில், நீதிபதிகள் நியமனத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை சகித்துக் கொள்ள முடியாது. கொலீஜியம் அளித்த பரிந்துரை, எங்கு, யாருடைய ஒப்புதலுக்காக காத்திருக் கிறது என்பது குறித்து, மத்தியஅரசு பதிலளிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

எங்களை ஏன் நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்? நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்து, எட்டு மாதங்க ளாகியும் அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்படவில்லை; இதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, அரசுடன் பேசி பதிலளிப்பதாக, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். 'நான்கு வாரங்களுக்குள் பதிளிக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரச்னை என்ன?:


* சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே, சுப்ரீம் கோர்ட் மற்றும், 24 ஐகோர்ட்டுகளுக்கான நீதிபதிகள் நியமனம், பணி இடமாற்றம் போன்றவற்றை பரிந்துரைக்கும்

* மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்ததும், கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை

Advertisement

எனக் கூறி, அதற்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டு வந்தது

* இதற்கென கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதனால், கொலீஜியம் முறையே தொடர்கிறது

* நீதிபதிகள் நியமனம், பணி இடமாற்றம் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்கான, வழிகாட்டு நெறி முறை களை வகுக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

* இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வழிகாட்டு நெறிமுறைகளில், சில திருத்தங் களை செய்யும்படியும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இது, தற்போது நிலுவையில் உள்ளது

* கொலீஜியம் அளிக்கும் பரிந்துரை, தேச பாதுகாப்புக்கு எதிராக இருந்தால், அதை நிரா கரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, சுப்ரீம் கோர்ட் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

478 நீதிபதி பணி இடங்கள் காலி:

ராஜ்யசபாவில் நேற்று, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி, உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்டுகளுக் கான, 1,079 நீதிபதி பணியிடங்களில், 478 காலி யாக உள்ளன. 39 லட்சம் வழக்குகள் நிலுவை யில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி யை யும் சேர்த்து, 31 நீதிபதி பணியிடங் களில், மூன்று காலியாக உள்ளன.
இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
13-ஆக-201621:00:54 IST Report Abuse

kadhiravanமோடி அரசு..,தொடர்ந்து நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு வருகிறது...இப்பொழுதும் ..மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருந்து வருகிறது..,அதை அரசு புரிந்துகொள்ளவேண்டும்..,

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஆக-201615:54:39 IST Report Abuse

Endrum Indianஒப்புதல் கிடைத்தவுடன் 3.02 கோடி தேங்கிய வழக்குகளில் உடனுக்குடனே தீர்ப்பு வந்து விடும்? உத்தரவாதம் தருவீர்களா????? முதலில் நீதியை தெளிவாக, நேரம் கருத்தில் கொண்டு (தீர்ப்பு-கொலை-10 நாளில், கற்பழிப்பு-2 நாளில், கொள்ளை-5நாளில்,சொத்து ஏமாற்றம்-3 நாளில்-எதற்கும் வாய்தா இல்லை, ஜாமீன் இல்லை, கீழ் கோர்டில் சொன்னாலே போது அது உச்ச நீதிமன்றம் வரை அதே தீர்ப்பு தான் என்று மாற்றுங்கள்), அரசியல்வாதி, பணக்காரன், நடிகன் என்று கருத்தில் கொள்ளாமல் வழங்குங்கள்.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-ஆக-201615:19:07 IST Report Abuse

தமிழர்நீதி என்னங்க இது லிஸ்டு கொடுத்திருக்கிறார்கள். ஒரு RSS இல்ல. சிறுபான்மையினரை தீ வைத்தோர் இல்லை. சம்ஸ்கிருதம் தெரிந்தோர் இல்லை. முன் அனுபவம், மத வெறி இல்லாதோர் லிஸ்டுல இல்லாததால், புது லிஸ்ட்டு கொடுங்க. அதுவரை நீதி சாகட்டும். சிறைவாசம் இருப்போர் அனுபவிக்கட்டும். நாங்க ஒரு குறிகிய கோளுடன் இருக்கோம்.முக்கியமான பதவி எல்லாம், RSS பிஜேபி இல்லை அதன் ஆதரவு கோஷ்டிகளுக்குத்தான். நீங்க என்ன கண்டிச்சாலும் நாங்க இதை கண்டுக்க மாட்டோம். செலஃபீ எடுப்போம், மணிக்கு ஒரு சட்டை மாத்துவோம், இன்ப சுற்றுலா செல்வோம். நேரமிருந்தா ஒலிம்பிக் போட்டியாளர்களை வழி அனுப்பி வைப்போம். நீதி பதிகள் கோப்புகள் பார்க்க நேரம் இல்லைங்கோ. GST வந்தாச்சு. இனி தேசம் முன்னுக்கு போயிரும். அநீதி கொள்கை கொண்டோரிடம் நீதிபதி பணி அமர்த்த சொன்னால் . எப்படிங்க ?

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X