அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ம.ந.கூ., தலைவர்களுடன் சந்திப்பு :
விஜயகாந்த் திடீர் ஒப்புதல்

நீண்ட அலைக்கழிப்பிற்கு பின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கு, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ம.ந.கூ., தலைவர்களுடன் சந்திப்பு : விஜயகாந்த் திடீர் ஒப்புதல்

கடந்த சட்டசபை தேர்தலில், ம.ந.கூ., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. தே.மு.தி.க.,விற்கு, 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார். இதனால், 'ம.ந.கூ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.

அதே நேரம், கூட்டணி முறிவு குறித்து எந்த அறிவிப்பையும் விஜயகாந்த் இன்று வரை வெளியிடவில்லை. இருந்த போதும், தன்னை சந்திக்க நேரம் கேட்ட, ம.ந.கூ., தலைவர்களைசந்திக்க, விஜயகாந்த் நேரம் அளிக்காமல் இருந்தார்.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் சூழ்நிலையில், ம.ந.கூ., தலைவர்களை சந்திக்க, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.'வரும் 25ம் தேதி, என் பிறந்த நாள் வருகிறது; அதன் பின், தலைவர்களை சந்திக்கிறேன்' என, விஜயகாந்த், ம.ந.கூ., தலைவர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.இதனால், ம.ந.கூ., தலைவர்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர்.


லட்டு வாங்க ஆளில்லை!


சென்னைகோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, கட்சியின் மாநில நிர்வாகிகள் துவங்கி, அடிமட்ட நிர்வாகிகள் வரை, அங்கு வருவர். நேற்றும் வழக்கம்

Advertisement

போல், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு லட்டு வழங்கினார். ஆனால், இந்த விழாவில், மொத்தமாக, 50 பேர் கூட இல்லை. மகளிர் அணியினர், ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தட்டு நிறைய லட்டுகள் இருந்தும், அதை வாங்கி சுவைக்க ஆள் வராததால், விஜயகாந்த், 'அப்செட்' ஆனார். - -நமது நிருபர் --

Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
16-ஆக-201619:32:25 IST Report Abuse

Ramshanmugam Iyappanவைகோ போன்ற அப்பழுக்கற்ற தலைவர்கள் ஏன் ஒன்றும் தெரியாத விஜயகாந்தின் பின்னே நிற்கிறார்கள், வேதனை அளிக்கிறது....

Rate this:
Anandan - chennai,இந்தியா
17-ஆக-201603:40:56 IST Report Abuse

Anandanஅவரிடம் கோடிக்கணக்கான சொத்து சேர்ந்துள்ளது. பெரும் பதவி வகித்ததில்லை. பின் எப்படி இவ்வளவு பணம்? அப்பழுக்கற்ற தலைவரா? ...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஆக-201612:22:02 IST Report Abuse

இந்தியன் kumarபரம்பரை ஜமீன் அவர் , அரசியலுக்கு வந்து அவர் இழந்தது அதிகம் . வைகோ ஒரு அப்பழுக்கற்ற தலைவர் , நாம் தான் நல்லவர்களை ஆதரிக்க மாட்டோமே ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-ஆக-201606:42:02 IST Report Abuse

Anandanஅவர் ஜாமீன் இல்லை. பொய்யை பரப்ப வேண்டாம். ...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-ஆக-201619:27:27 IST Report Abuse

Pasupathi Subbianகடைவிரித்தேன் கொள்வாரில்லையே

Rate this:
Balaji - Khaithan,குவைத்
16-ஆக-201617:36:05 IST Report Abuse

Balajiஇவர் மற்றும் இவரின் குடும்பத்தினர் தனது சுயபலத்தை பரிசோதிக்க விழையாமல் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்பது போல மாயத்தோற்றத்தை நம்பியதால் விளைவுதான் இப்போது கட்சியில் 50 பேர் கூட வராமல் இருக்கிறார்கள்..... இப்போதாவது மாயத்தோற்றத்திலிருந்து விடுபட்டு உண்மையில் கட்சியை கட்டமைப்பதில் கவனம் செலுத்தினாரேயானால் நிச்சயம் எதிர்காலத்தில் இரண்டு கழகங்களுக்கு மாற்றாக உருப்பெற முடியும்...... உணர்ந்து செயல்பட வேண்டியது மட்டும் தான் முக்கியம்....... புரிந்து கொண்டால் பிழைக்கலாம்....

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X