அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? : 'சர்வே' எடுக்க ராஜா வேண்டுகோள்
அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? : 'சர்வே' எடுக்க ராஜா வேண்டுகோள்

அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? : 'சர்வே' எடுக்க ராஜா வேண்டுகோள்

Added : ஆக 15, 2016 | கருத்துகள் (62) | |
Advertisement
திருச்செங்கோடு: 'தமிழக மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு, மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில்,புதிய கல்விக் கொள்கை குறித்து பேசும்போது, 'சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்க, ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்' என, பேசுகின்றனர். தமிழக
அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? : 'சர்வே' எடுக்க ராஜா வேண்டுகோள்

திருச்செங்கோடு: 'தமிழக மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு, மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில்,

புதிய கல்விக் கொள்கை குறித்து பேசும்போது, 'சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்க, ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்' என, பேசுகின்றனர். தமிழக அமைச்சர்களின் குழந்தைகள், தி.மு.க., முன்னணி தலைவர்களின் பிள்ளைகள்; பேரன்கள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என, ஒரு, 'சர்வே' எடுத்து வெளியிட்டால், இவர்களது முகத்திரை கிழிந்து போகும். புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதம் நடத்த, பா.ஜ., தயாராக உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல, ஆழ்கடல் மீன் பிடித்தல் என்ற மாற்று ஏற்பாட்டை செய்து தர, மத்திய அரசு தயாராக உள்ளது; இதற்கு மீனவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.நம் மீனவர்களின் நிரந்தர தீர்வுக்காக, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (62)

மீசநேசன் - chennai,இந்தியா
17-ஆக-201620:13:53 IST Report Abuse
மீசநேசன் ஹிந்தி படிச்சவன் இங்கே சோன்பாப்டி விக்கிறான், தமிழ் மீடியத்தில படிச்ச நான் டெல்லியில பொறியாளராக இருக்கேன், ஹிந்தி கத்துக்க வெறும் 3 மாதம் போதும் ஒழுங்கா எல்லோரும் தமிழ் படிப்போம், வெளி ஊருக்கு போன தான் சொந்த ஊரோட அருமை தமிழனுக்கு புரியும்.
Rate this:
Cancel
RADHAKRISHNAN N - chennai,இந்தியா
16-ஆக-201622:19:38 IST Report Abuse
RADHAKRISHNAN N மாணவர்களின் வீக்னெஸ்ஸை புரிந்து கொண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி ஏழை தமிழர்களை ஹிந்தி படிக்கவிடாமல் கெடுத்து பல சந்ததிகளை வீணடித்த கட்சிகள் திராவிட கட்சிகள்... .. இன்னும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .... பாவம் ஏழை தமிழன் .... ஹிந்தி படிப்பதனால் தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ அழியவில்லை.... மாணவர்களே புரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Cancel
Dhakshinamoorthy Maikandadevan - Coimbatore,இந்தியா
16-ஆக-201621:46:35 IST Report Abuse
Dhakshinamoorthy Maikandadevan தமிழில் தான் படிக்க வேண்டும் என்ற இந்த அரசின் கொள்கை முடிவு வேறு என் பேரன் பேத்திகள் ஆங்கில வழி கல்வி படிப்பது என்பது வேறு என்று பேராசிரியர் அன்பழகன் கூறியது ராஜாவிற்கு தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X