'பாஸ்போர்ட் ரத்தானதால் இந்தியா வரவில்லை!' : 'இ - மெயில்' மூலம் மல்லையா பதில்
'பாஸ்போர்ட் ரத்தானதால் இந்தியா வரவில்லை!' : 'இ - மெயில்' மூலம் மல்லையா பதில்

'பாஸ்போர்ட் ரத்தானதால் இந்தியா வரவில்லை!' : 'இ - மெயில்' மூலம் மல்லையா பதில்

Added : செப் 09, 2016 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ''இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால் என், 'பாஸ்போர்ட்' ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு வர முடியவில்லை,'' என, டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பதிலில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தன்னுடைய, 'கிங்பிஷர்' நிறுவனத்தின், 'லோகோ'வை பயன்படுத்திக் கொள்ள, வெளிநாட்டு
'பாஸ்போர்ட் ரத்தானதால் இந்தியா வரவில்லை!' : 'இ - மெயில்' மூலம் மல்லையா பதில்

புதுடில்லி: ''இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால் என், 'பாஸ்போர்ட்' ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு வர முடியவில்லை,'' என, டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பதிலில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தன்னுடைய, 'கிங்பிஷர்' நிறுவனத்தின், 'லோகோ'வை பயன்படுத்திக் கொள்ள, வெளிநாட்டு நிறுவனத்துடன் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்தார். இதற்காக, இரண்டு லட்சம் டாலர் கொடுத்துள்ளார். வெளிநாட்டு பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறாமல், பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக விஜய் மல்லையா மீது, 2000ல், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகததால், விஜய் மல்லையா மீது டில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், மல்லையா நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து, கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு, ஜூலை, 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மல்லையாவுக்கு நேரில் ஆஜராக அளிக்கப்பட்ட விலக்கை, கோர்ட் ரத்து செய்தது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்

உத்தரவிட்டது. இந்த நிலையில், இ - மெயில் மூலம் மல்லையா அனுப்பியுள்ள பதில், கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மல்லையா கூறியுள்ளதாவது:

நான், இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால், என்னை விசாரிக்காமல், ஏப்ரல், 23ம் தேதி, என்னுடைய பாஸ்போர்ட்டை, இந்திய அரசு ரத்து செய்துள்ளது; அதனால், இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'மல்லையா மீது பல்வேறு கோர்ட்களில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தன் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து பதில் மனுவில் முதல் முறையாக அவர் கூறியுள்ளார். 'இதுகுறித்து ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்' என, அமலாக்கத் துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-செப்-201613:52:38 IST Report Abuse
Rafi லட்சத்து பன்னிரெண்டாயிரம் கோடிகள் மோடி அவர்களால் தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, கவலையில்லாமல் மோடிஜியை சந்தித்து பயன் அடையாளம்.
Rate this:
Cancel
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
10-செப்-201610:49:21 IST Report Abuse
Jeyakumar Jeyakumar உன் பாஸ்போர்ட் செலவை நான் ஏத்துக்குறேன். நீ வந்தா மட்டும் போதும் சாமி. மத்தத நாம் பாத்துக்குறோம்.
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
10-செப்-201609:28:46 IST Report Abuse
Sathya Dhara \குற்றம் புரிந்தவர் என்று ஊரே சிரிக்கும் போது ....ஏனப்பா நாட்டை விட்டு ஓடினாய்.சுத்தமானவனாக இருந்தால் நீதிமன்றத்தில் சந்திப்பதுதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X