அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்கள் நல கூட்டணியில்
தொடர விஜயகாந்த் விருப்பம்

உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் நலக் கூட்டணியில் தொடர, விஜயகாந்த் விரும்புவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 மக்கள் நல கூட்டணியில் தொடர விஜயகாந்த் விருப்பம்

சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, தே.மு. தி.க.,வினர் விரும்பினர். ஆனால், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது.

இந்த முடிவால், விரக்தி அடைந்த மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் பலர், கட்சியில் இருந்து விலகினர். அத்துடன், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,

படுதோல்வி அடைந்ததும், மேலும் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர்.

இதனால், கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும், 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம்; மக்கள்நலக்கூட்டணியை கைகழுவுங்கள்' என, கட்சித் தலைவர் விஜயகாந்திடம், வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், 'உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டி யிடும்' என, சமீபத்தில், விஜயகாந்த் அறிவித்தார். இருப்பினும், வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்த அவர், வேறு வழியின்றி, மக்கள் நலக்கூட்டணியை தொடர விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, தே.மு.தி.க.,வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

உள்ளாட்சிகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவி கள் உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட ஆட்கள் இல்லை; இருப்பவர்களும் போட்டியிட தயங்குகின்றனர். எனவே, மக்கள் நலக்

Advertisement

கூட்டணி யுடன் கூட்டணியை தொடர, விஜயகாந்த் விரும்புகிறார்.

அப்படி செய்தால், உள்ளாட்சி பதவிகளை பகிர்ந்து கொள்ள முடியும்; குறைந்த இடத்தில், தே.மு.தி.க., போட்டியிட்டு சமாளிக்கலாம் என்பதே, விஜயகாந்தின் கணக்கு. இதுகுறித்து, மாவட்ட செயலர்களை அழைத்து கருத்து கேட்டபின், முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு தே.மு.தி.க.,வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
19-செப்-201619:38:36 IST Report Abuse

Durai Ramamurthyஇவ்வளவு நெஞ்சுரம் கொண்டவரா நீங்கள். வைகோவிற்கு பின் வைகோ இல்லாத குறையை விஜயகாந்த் போக்கிவிடுவார்.

Rate this:
Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ
19-செப்-201618:18:19 IST Report Abuse

Anton Phamதிருவோடு சின்னத்தில் போட்டியிடவேண்டும் என விரும்புகிறோம்

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
19-செப்-201616:56:17 IST Report Abuse

Jaya Ramஅதுதான் உமக்கும் உம்முடைய கட்சிக்கும் நல்லது

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X