பதிவு செய்த நாள் :
காங்கிரசை விட கூடுதல் ஓட்டு :
பா.ஜ.,வுக்கு அமித் ஷா அறிவுரை

'உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை விட, கூடுதல் ஓட்டுகளைப் பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரசை விட கூடுதல் ஓட்டு : பா.ஜ.,வுக்கு அமித் ஷா அறிவுரை

தமிழகத்தில், காங்கிரசை விட கூடுதல் பலம் பெற வேண்டும்; திராவிட கட்சிகளுக்கு மாற் றாக வளர வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். அந்த எண்ணத்தில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் தனி அணி அமைத்து, தேர்தலை சந்தித்தனர்; ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இருப்பினும், 19 சதவீத

ஓட்டுகளை கூட்டணி பெற்றது.

அடுத்து நடந்த சட்டசபை தேர்தலுக்கும், தனி அணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது; ஆனால், 10 சதவீத ஓட்டுகளை கூட பெற வில்லை. உள்ளாட்சி தேர்தலிலும், சிறிய கட்சிகளுடன்கூட்டணி அமைத்து, பா.ஜ., தனி அணியாக போட்டியிடுகிறது. இம்முறை, தேசிய கட்சியான காங்கிரசை விட, கூடுதலான ஓட்டுகளை வாங்க வேண்டும் என, தமிழக தலைவர்களுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலத் தலைவர்களுக்கு கூறியுள்ள தாவது: உள்ளாட்சி தேர்தலில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு பா.ஜ., வெற்றி பெற வேண்டும். காங்கி ரசை விட, கூடுதல் இடங்களில் வெற்றிபெறுவ தோடு, கூடுதல் ஓட்டுகளையும் பெற வேண்டும். அதற்கு, மத்திய அரசின் செயல்பாடுகளை, மக்கள் மத்தியில் பிரசாரமாக வைக்க வேண்டும்.

தலித் மக்களின் தோழனாக, பா.ஜ.,வும், மத்திய அரசும் இருப்பதை, அவ்வின மக்கள் மத்தியில்

Advertisement

கொண்டு செல்ல வேண்டும். இதையெல்லாம் செய்தால், தமிழக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். அப்படி செய்தால் மட்டுமே, அடுத்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமித் ஷாவின் அறிவுரையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள, தமிழக பா.ஜ., தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
02-அக்-201623:55:59 IST Report Abuse

தாமரை தமிழகம் தேசியக்கட்சிகளின் பக்கம் திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது. அதிலும் பா ஜ க வின் பின்னால் வருவதே தமிழகத்துக்கு நல்லது.உள்ளாட்சித் தேர்தலில் பா ஜ வென்ற இடங்களில் மத்திய அரசின் செல்வாக்கை பயன்படுத்து அங்கு நிறைய வசதிகளை செய்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் மத்திய ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் ஜெயிக்கும் மாநிலத்துக்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும் என்று உணர்ந்து இனியாவது வருங்காலத்தில் தேசிய கட்சியின் பின்னால் மக்கள் அணி திரள்வார்கள்.வாக்காளர்கள் இப்பொழுதெல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள். இதை பா ஜ க தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.

Rate this:
MOGANDOSS RAO - New Delhi,இந்தியா
02-அக்-201621:39:38 IST Report Abuse

MOGANDOSS RAOஜெயிலில் இருக்க வேண்டிய கைதி ஜாமினில் வெளிவந்து பேசுறது இந்திய அரசியல் சட்டம் . உன் கனவு பலிக்காது கைதி அமித்சஹா .

Rate this:
AXN PRABHU - Chennai ,இந்தியா
02-அக்-201618:59:01 IST Report Abuse

AXN PRABHUஅமித்ஷாவுக்கு தமிழகத்தின் உண்மை நிலவரத்தை ஒரு பிஜேபி காரரும் எடுத்து சொல்ல வில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. ஒரு தேமு திக வை விட அதிக ஓட்டு வாங்க வேண்டும் என்று கூறினாலாவது அமித்ஷா கொஞ்சம் அறிவுபூர்வமாக பேசுகிறார் என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் ஏற்கனவே அழிந்துவிட்ட காங்கிரசை விட அதிக ஓட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பது அடிப்படையிலேயே தவறு. அமித்ஷா தமிழகத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X