ஜெயலலிதா உடல் நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்த ராஜாத்தி
ஜெயலலிதா உடல் நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்த ராஜாத்தி

ஜெயலலிதா உடல் நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்த ராஜாத்தி

Added : அக் 14, 2016 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, நேற்று முன்தினம், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் ஜெலலிதாவின் உடல் நலம் குறித்து, சசிகலாவிடம் விசாரித்து உள்ளார். முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், மருத்துவமனை சென்று, அவரது உடல் நலம் பற்றி விசாரித்து
ஜெயலலிதா உடல் நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்த ராஜாத்தி

சென்னை: தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, நேற்று முன்தினம், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் ஜெலலிதாவின் உடல் நலம் குறித்து,

சசிகலாவிடம் விசாரித்து உள்ளார்.


முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், மருத்துவமனை சென்று, அவரது உடல் நலம் பற்றி விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு,

கருணாநிதியின் ஒப்புதலுடன், அவரது மனைவி ராஜாத்தி, அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அங்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து, முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்; இந்த சந்திப்பு, 30 நிமிடங்கள் நீடித்தது. ஜெயலலிதா பூரண நலம் பெற்று, விரைவில் வீடு திரும்பி, பணிகளை கவனிக்க வேண்டும் என, சசிகலாவிடம், ராஜாத்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்; கருணாநிதி சார்பிலும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு, சசிகலா நன்றி தெரிவித்து உள்ளார். அவரை தொடர்ந்து, விரைவில், தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழியும், அப்பல்லோ மருத்துவமனை செல்ல திட்டமிட்டு உள்ளார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன், அப்பல்லோ சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

r.sundaram - tirunelveli,இந்தியா
15-அக்-201617:01:54 IST Report Abuse
r.sundaram இதற்கெல்லாம் போக முடியும். ஆனால் கோர்ட்டுக்கு, சம்மன் வந்தாலும் போக முடியாது,அப்படியே போனாலும், உலகத்தில் இல்லாத வியாதி எல்லாம் வந்துவிடும், முன் நடந்தது ஒன்றுமே ஞாபகம் இருக்காது. சம்பந்தப்பட்ட கோர்ட் இந்த நிகழ்வை குறிப்பில் கொள்ள வேண்டும்.
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-அக்-201601:21:49 IST Report Abuse
மலரின் மகள்அவர் வேறு இவர் வேறு....
Rate this:
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
15-அக்-201613:03:27 IST Report Abuse
Krishna Sreenivasan ராசாத்தி பாத்தாச்சு நாளைக்கே ஜெயம்மா பூரண சுகம் பெற்று வந்துருவாங்க கோட்டைக்கு வெல்கம் அம்மா
Rate this:
Cancel
manivannan - chennai,இந்தியா
15-அக்-201612:22:56 IST Report Abuse
manivannan இவர் கட்சி தலைவர் இல்லை தான் ஆனால் கட்சி தலைவர் போக இயலாததால் இவரை அனுப்பி இருக்கிறார் ஆனால் கவுரவ பிரச்னையால் இவராகவே Tனால் அவர் ஒப்புதலுடன் சென்றதாக அதாவது அவர் இடத்தில் இவர் சென்றார் என்று அர்த்தம் .. ஆனால் எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை, அதான் " ஆடு நனைகிறதே ....."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X