அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை
அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை

அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை

Added : அக் 15, 2016 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: ''தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் எச்சரித்து உள்ளார்.அதிக விலை:இதுகுறித்து டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை, அதிகபட்ச விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு,
அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை

புதுடில்லி: ''தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் எச்சரித்து உள்ளார்.




அதிக விலை:



இதுகுறித்து டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை, அதிகபட்ச விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு, தியேட்டர்கள், விமான நிலையங்கள், மால்கள் போன்றவற்றில் விற்கப்படுகின்றன. இது தொடர்பாக, நுகர்வோர் அளித்த ஒரு புகாரில், அபராதம் விதித்து, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், அதிக விலைக்கு விற்பது தொடர்கிறது.




சிறை தண்டனை:


இது குறித்து, நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும். தண்ணீர் பாட்டில்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.




தரமான தயாரிப்பு:


தரம் இல்லாமல், 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி பெற முடியாது. 'மேட் இன் அமெரிக்கா' என்ற முத்திரை இருந்தால், சந்தோஷமாக வாங்கும் இந்தியர்கள், இந்திய தயாரிப்புகளை வாங்குவதற்கு யோசிக்கின்றனர். இந்த நிலை மாற, நல்ல தரத்துடன் பொருட்களை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

M.Guna Sekaran - Madurai,இந்தியா
15-அக்-201619:34:47 IST Report Abuse
M.Guna Sekaran மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் என்ன லூசா? தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை என்று கூறுகிறார் , அப்புறம் வர வேண்டியா மறைமுக லஞ்ச பணம் வராது , எல்லா விற்பனைகளும் உங்கள மாதிரி அரசியல் வாதியின் துணையோடு தான் நடக்கிறான். அப்புறம் எப்படி தண்டனை? அப்புறம் எல்லா அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியரும் சிறையில் களி தான் திங்கணும் ,
Rate this:
Cancel
G.Rajagopalan - Seeatle,யூ.எஸ்.ஏ
15-அக்-201619:27:54 IST Report Abuse
G.Rajagopalan ஸ்டார் உணவகங்களில் MRP உடன் சேவை வரி லொட்டு- லொசுக்கு வரி சேர்ப்பதால் இந்த விலை
Rate this:
Cancel
Balaji - Khaithan,குவைத்
15-அக்-201614:53:02 IST Report Abuse
Balaji /////நுகர்வோர் அளித்த ஒரு புகாரில், அபராதம் விதித்து, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு அளித்தது/////// என்ன தீர்ப்பு இருந்து என்ன பயன்???? இதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் கண்காணிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு..... அதை அரசு எந்தவித சமரசமும் இல்லாமல் செய்திருந்தால் தாங்கள் இப்படி எச்சரிக்கை செய்யவேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காதே இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகளை ஒழுங்காக வேலை செய்ய வையுங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X