அக்., 20ல் மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி
அக்., 20ல் மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

அக்., 20ல் மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

Added : அக் 17, 2016 | |
Advertisement
மோகனூர்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் அகிலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, 'மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை

மோகனூர்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் அகிலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, 'மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு குறித்து விளக்கப்படுகிறது. சொட்டு நீர்பாசனம், உரம் மற்றும் களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், பூச்சி நோய் நிர்வாகம் குறித்த தொழில் நுட்பங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது, 04286 -266 345, 266 650 என்ற எண்ணிலோ, வரும், 19ம் தேதிக்குள், முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X