புதிய நோட்டுக்களை மாற்றுவதற்கே முன்னுரிமை: ஜெட்லி

Updated : நவ 12, 2016 | Added : நவ 12, 2016 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி ; ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த பணபரிவர்த்தனை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் விளக்கினார்.டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நாடு முழுவதும் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவு அளித்து வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி.
புதிய நோட்டுக்களை மாற்றுவதற்கே முன்னுரிமை : ஜெட்லி

புதுடில்லி ; ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த பணபரிவர்த்தனை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நாடு முழுவதும் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவு அளித்து வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி. மக்கள் பொறுமை காப்பதற்கும் நன்றி.

வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர். மக்கள் இதனை ஆதரிக்கின்றனர். வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் காலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றி வருகின்றனர். அனைத்து சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பண பரிமாற்றங்களை நிதித்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. சில நாட்கள் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். கூட்டம் குவிவது இயற்கையானது.


மிகப் பெரிய ஆப்பரேஷன் இப்போது தான் துவங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் எடுக்கப்படுகிறது, டெபாசிப் செய்யப்படுகிறது என்ற புள்ளிவிபரங்களை வங்கிகளிடம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை கேட்டறிந்து வருகிறோம். நவம்பர் 12 (இன்று) பகல் 12.15 மணி வரை எஸ்பிஐ.,யில் மட்டும் ரூ.2 கோடியே 28 லட்சம் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. எஸ்பிஐ.,யில் ரூ.47,868 கோடி டிபாசிப் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் பேர் இதுவரை தங்களின் பழைய நோட்டுக்களை மாற்றிச் சென்றுள்ளனர்.


இந்த நடவடிக்கை ஒரே இரவில் எடுக்கப்பட்டது கிடையாது. இந்த அறிவிப்பு வெளியிட்டதும் மக்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு செல்வார்கள் என்பது அரசு எதிர்பார்த்தது தான். புதிய நோட்டுக்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம்., இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதால் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்யும். மக்களிடம் ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காகவே ரகசியம் காக்கப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில பொறுப்பற்றதனமாகவே உள்ளன. மக்களின் சிரமங்களை குறைத்து, அனைத்தையும் சரியாக செய்ய வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. அரசு அதனை பொறுப்புடன் செய்தும் வருகிறது.


கறுப்பு பணத்தை சுத்தப்படுத்துவது வருவாய் துறைக்கு பெரிய சவாலாக இருந்து வந்தது. உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தும் கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வருவது சிரமமாகவே இருந்தது. இந்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பது சாத்தியம் இல்லாமல் போனது அதனாலேயே ரகசியமாக வைக்க வேண்டியதாக இருந்தது. ஏடிஎம்.,களில் இதுவரை ரூ.2000 நோட்டுக்கள் வைக்கவில்லை. அதனால் உங்களால் ரூ.2000 நோட்டுக்களை எடுக்க முடியாது. சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் பணம் மூலமாகவோ அல்லது தங்கத்திலோ நடக்காது என்றார்.


தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரூ.2000 நோட்டில் சிப் இருப்பதாக முதல் நாளில் இருந்தே வதந்தி பரவி வருகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. உண்மையில்லை பிரச்னை மக்களிடம் இல்லை. கள்ளநோட்டுக்களையும் அரசு கண்காணித்து வருகிறது. எல்லா இடங்களிலும் நீண்ட வரிசை இருந்தாலும் அனைத்து இடத்திலும் அமைதியான சூழலே உள்ளது. ஒவ்வொருவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பது கறுப்பு பணம் மீண்டும் உருவாக வழிவகுக்கும். அனைவரும் வங்கிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

Srinivasan Badri - Chennai,இந்தியா
30-நவ-201620:19:47 IST Report Abuse
Srinivasan Badri கருப்பு பணத்தை சுத்தம் செய்ய முடியாமல் இருக்கும் வருமான வரி இலாக்காவை முதலில் சுத்தம செய்திடவேண்டும். இல்லாவிடில் எந்த விதமான நடவடிக்கைகளும் பயன் தராது. பணத்திற்க்காக வாக்களிக்கும் மரபை மாற்றி, பலன் தரும் வேட்பாளர்களை தேர்ந்தேடுத்தால் நாடு முன்னேறும் . இல்லாவிடில் நாய் வாலே நீட்டும் கதை ஆகிவிடும்.
Rate this:
Cancel
CJS - cbe,இந்தியா
13-நவ-201609:03:55 IST Report Abuse
CJS திட்டம் என்னமோ அருமையான திட்டம் தான். ஆனால் அதனை செயல் படுத்துவதில் கோட்டை விட்ட மாதிரி தெரிகிறது. வங்கிகளில் கூட்ட நெருக்கடியை சமாளிக்க போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. கூடுதல் வங்கி ஊழியர்களை நியமிக்கவில்லை. அதுவும் வங்கியில் கேஷியர்(காசாளர்) நிலைமை அந்தோ பரிதாபம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரே இடத்தில உட்கார்ந்து கொண்டு. அன்றாட கூலி வாங்குகிற மற்றும் சிறு வணிகர்கள் மிக பாவம் தான், அரசின் இந்த அறிவிப்பின் மூலம், சூப்பர் மார்க்கெட்டில் வியாபாரம் ஓகோ. ஆக இந்த அரசு உண்மையில் மக்களுக்கான அரசுவா இல்லை கார்ப்பரேட் காண அரசுவா என்பது தெரியவில்லை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-நவ-201607:55:06 IST Report Abuse
S.Baliah Seer SBI -வங்கி கியூவுக்கு டோக்கன் முறையை கடை பிடிக்கிறது.மற்ற வங்கிகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.டிசம்பர் வரை பழைய நோட்டுக்களை மாற்ற அவகாசம் கொடுத்திருப்பதால்,அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு தனி க்யூவும்,அக்கவுண்ட் இல்லாமல் பணம் மாற்ற வருபவர்களுக்கு தனி க்யூவும் -வங்கிகள் ஏற்பாடு செய்யவும்.கமிஷன் வாங்கிக்கொண்டு பிறர் பணத்தை மாற்றிக் கொடுக்கும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X