பதிவு செய்த நாள் :
' நாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு மோடி...'சல்யூட்!:பதுக்கல்காரர்கள் மீதான அடுத்த அதிரடிக்கும் தயார்

கோபே:''கறுப்புப் பணம் பதுக்கி வைப்போருக்கு எதிராக, டிசம்பர், 30க்கு பின், மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்;

நாட்டு நலனில் அக்கறை வைத்து, வங்கிகளில் பணம் மாற்ற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

' நாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு மோடி...'சல்யூட்!:பதுக்கல்காரர்கள் மீதான அடுத்த அதிரடிக்கும் தயார்

மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திரும்பும் முன், கோபே நகரில், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது:

கறுப்புப் பணத்தை மீட்க, அரசு மேலும் பல நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் பழைய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்; இதற்கு தேவை யான ஆட்களை பணியமர்த்துவோம்.

நியாயமாக சம்பாதித்து, வரி கட்டும் மக்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. அதேசமயம், கறுப்புப் பணம் பதுக்குவோரை, அரசு சும்மா விடாது.என்னை பற்றி தெரிந்து வைத்துள் ளோர், புத்திசாலிகளாகவும் இருப்பர்;

அவர்கள், ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்து வதை விட, கங்கையில் வீசுவதே பரவா யில்லை என நினைக்கின்றனர்; அதனால் தான், கங்கை நதியில் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை கள் எடுக்கப்படும்.

தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அரசு

Advertisement

அறிவித்ததற்கு, மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

பல்வேறு சிரமங் கள் ஏற்பட்டாலும், இந்த நட வடிக்கையை வரவேற்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.ஆறு மணி நேரம், வங்கியில் வரிசையில் காத்திருந்தாலும், நாட்டு நலன் கருதி, இத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த திட்டம் குறித்து, நீண்ட நாளாக யோசித் தேன்;

மக்கள் எதிர்கொள்ளக்கூடிய சிரமங் களையும் யோசித்தேன்.திட்டம் தொடர்பான தகவல்களை ரகசியம் காக்க வேண்டிய கடமையும் இருந் தது. திடீரென, இதை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை.இவ்வாறு மோடி பேசினார்.

'ரூபாய் அச்சடிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது'


செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு களுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை அச்சடிக் கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:

ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் பணிகளை தொடர்ந்து வருகின் றன. வங்கிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில், பொதுமக்கள், 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' கார்டுகளை பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும், 4,000 இடங்களில், போதிய ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப் பட்டுள் ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
14-நவ-201612:06:37 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஇந்திய மக்கள் Q விற்கு பயந்தவர்கள் அல்ல .அவர்கள் அன்றாட வாழ்வே Q வில் நிற்பதுதான் .அதனால் இந்த பாதிப்பு அவர்களை பாதிக்காது வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் , அன்றாடம் காய்சசிகள் இவர்கள் குறைந்தது ரூ .2000 /- எளிதில் பணம் பெற வங்கிகள் தனி கவுண்டர்கள் அமைக்கவேண்டும் . ஊடகங்களும் , மோடியின் இந்த அரிய செயலால் பாதிக்கப்பட்ட கள்ளநோட்டு கும்பலும் தான் இதை பெரிது படுத்துகின்றன .சொத்து வரி கட்டாதவர்கள், மின்சாரம் ,மற்றும் தண்ணீர் வரி செலுத்தாதவர்கள் எல்லாம் இப்போது பணம் கட்டுகிறார்கள். அரசுக்கும் வருமானம் பெருகியுள்ளது. வங்கிகளில் கிட்டத்தட்ட 3 லச்சம் கோடிக்கு மேல் டிபாசிட் ஆகியுள்ளது. கள்ள நோட்டு கும்பல் அதை எரித்துக்கொண்டிருக்கிறார்கள். .எதிர்க்கட்சிகள் மக்களின் சங்கடங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்ய முயல்வது ஆபத்தானது. அது கருப்புப்பணமுதலைகளின் கைவேலைதான் என்று மக்கள் சந்தேகப்படுவார்கள். .கிராமப்புறங்களில் , சந்தைகளில் நடமாடும் .ATM அமைத்தால் சிரமம் குறையும்

Rate this:
bairava - madurai,இந்தியா
14-நவ-201601:29:05 IST Report Abuse

bairava அன்பு நண்பர்களே ஆசிரியரே, பிரதமரின் இந்த அதிரடி முடிவை அவதூறாக பேசும் தருதலைகளை கண்டு அஞ்சவேண்டாம். நாடும் நாட்டு மக்கள் நலன் கருதியும் அடுத்த தலைமுறை ஊழல் இல்லா நாட்டில் வாழ வழிசெய்யும் சிறந்த முயற்சியை பிரதமர் எடுத்துள்ளார் என்றால் அதை வரவேற்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு திரியும் அந்நிய சக்திகளை நாடு கடத்தவேண்டும். இதில் மாற்று கருத்து சொல்லும் சாமானியனை விடுங்கள். வீணாப்போன ஊடகங்கள் தான் இதை திருவி திருவி குற்றம் கண்டுபிடிக்கின்றனர். அவர்களின் டீ ஆர் பி ரேட்டிங் கூட அதைக்கண்டு கொள்ளத்தேவையில்லை உதாரணத்திற்கு 1.இரண்டாயிரம் ரூபா நோட்டில் ஜி பி ஸ் சிப் உள்ளது என்று ஆர் பி ஐ சொன்னது உண்மையா பொய்யா ? 2.நோட்டில் உள்ள 15 மொழிகளை பிழையுடன் எழுதியது சரியா? தவறா ? இவை இரண்டுமே வதந்திகள் என்றே சொல்லுவோம் அதனால் யாருக்கு லாபம் நாட்டம் என்று தெரியுமா ?அந்த புதிய சிப் வைத்ததினால் அந்த நோட்டை பதுக்க நினைக்கும் கருப்பு ஆட்டிற்கு பயம் வரும் சிப் இருக்கா இல்லையா என்று தேடிக்கொண்டிருக்கும் இருக்கட்டுமே உனக்கு என்னடா வந்துச்சு ? மொழிகளில் எழுத்து பிழை உன்கிட்ட திருத்த சொல்லி கேட்டார்களா? ஒரிஜினல் நோட்டில் பிழை இருந்தால் கள்ள நோட்டு அடித்தால் கண்டுபிடிக்கலாம். ஆகவே அது தெரிந்தே வைக்கப்பட்டது. உனக்கு எங்கடா வலிக்குது அவன் அவன் பொத்திக்கிட்டு இருக்குற கருபபு பணத்தை கொடுத்துட்டு வெள்ளை பணத்தை வாங்கிகிட்டு போங்கடா

Rate this:
S.SARAVANAN - RAMANATHAPURAM,இந்தியா
13-நவ-201620:04:53 IST Report Abuse

S.SARAVANANஉளி விழம் போது வலினு நினைக்கிற எந்த கல்லும் சிலை ஆக முடியாது. ஏர் உழும் போது கஸ்டம்னு நினைக்கிற எந்த நிலமும் விளையாது அப்பா கோபப் படுறத தப்புனு நினைக்கிற எந்தப் புள்ளையும் முன்னுக்கு வரமுடியாது.பிரதமர் கொண்டு வர்ர திட்டத்தை தப்புனு நினைத்தால் நாடும் முன்னேறாது நாட்டு மக்களும் முன்னேற முடியாது.

Rate this:
vidhuran - chennai,இந்தியா
14-நவ-201610:41:22 IST Report Abuse

vidhuranஎன்னங்க சார் சரவணன் நீங்க சொல்ற உதாரணமெல்லாம் சாதாரண மனுஷனுங்களுக்கு உளி விழும் வலி சிலைக்கு தெறியாது ஏர் உழும் வலி மண்ணுக்கு தெறியாது, ஆனால் கள்ளப்பணம்/கருப்புபணக்காரனுக்கு வலியும் தெரியணும், அடியும் விழணும். சந்தானம் சொல்லற மாதிரி இவனுங்களேயெல்லாம் ஜெயிலலை போடுங்க சார் ...

Rate this:
மேலும் 127 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X