பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கறுப்புப் பணத்தை மாற்ற உதவுபவர்களுக்கு... அபராதம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை

புதுடில்லி:'கறுப்புப் பணத்தை மாற்ற உதவு பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்புப் பணத்தை, தங்கள் வங்கி கணக்கில் செலுத்த அனுமதிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்புப் பணத்தை மாற்ற உதவுபவர்களுக்கு... அபராதம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய்
நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டு களை வங்கிகளில் மாற்றுவதற்கு, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கறுப்புப் பணம் வைத்துள்ள நபர்கள், இடைத்தரகர்கள் மூலம், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, வங்கிகளில் மாற்றத் ,துவங்கினர்.

இதையடுத்து, வங்கிகளில் பணம் மாற்றும்

நபர்களுக்கு, மை வைக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது.

ஆனாலும் சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கறுப்புப் பணத்தை, 'டிபாசிட்' செய்து, வெள்ளை யாக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கும்மத்திய அரசின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், வங்கி கணக்குகள் தொடர் பாக மத்திய நிதியமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்கள் கணக்கில் வேறொருவரின் கறுப்புப் பணத்தை செலுத்த அனுமதிப்பது சட்டவிரோத செயல்; அவர்கள் நடவடிக்கைக்கு ஆளாவர்.

குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகள், 'ஜன் தன்' வங்கி கணக்குகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்வது தெரிந்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, வருமான வரித்துறை விசாரணை நடத்தும்.

தவறு செய்தோருக்கு, கடுமையான அபராத மும் விதிக்கப்படும். தவறான வழிகளில்

Advertisement

பணத்தை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் குறித்து, வரு மான வரித்துறைக்கு, மக்கள் தகவல் தர வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி நடக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த, மத்திய அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கண்காணிப்பு வளையம்


அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, 'ஜன் தன்' திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலம், 23 கோடி, ஜன் தன் வங்கி கணக்குகள் துவக்கப் பட்டன. இவற்றில், பெரும்பாலானவை செயல் பாட்டில் இல்லாமல் இருந்தன.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட பின், ஜன் தன் வங்கி கணக்கில் ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஜன் தன் வங்கி கணக்குகள், வருமான வரித்துறையின் கண் காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் படுகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
19-நவ-201618:52:01 IST Report Abuse

CHANDRA GUPTHANஏழை, எளிய, நடுத்தர மக்களைப்பற்றி கவலைப்படும் அரசியல்வாதிகள் , கருப்பு பண ஊழல் வாதிகள் மக்கள் கஷ்டம் தீர தங்களிடம் உள்ள பணத்தை அரசாங்கத்திடம் கொடுத்து மீதம் உள்ளதை வைத்து சந்தோஷப்படுங்களேன் . இதுவரை யாரும் அப்படி நினைக்க கூட வில்லையே . என்னமோ சமையலறையில் இருந்த பணத்துக்கு வரி கட்டணுமா ? கேள்வி ஒரு சராசரி குடும்பத்திற்கு அதிக பக்ஷமாக வீட்டுவாடகையுடன் சேர்த்து Rs.50,000.00 போதும் . அதை எடுக்க எந்த தடையும் இல்லையே . எந்த பரிவர்த்தனை இருந்தாலும் வங்கி மூலமாக செலுத்துங்கள் என்று தான் கூறுகிறார்கள் . எதோ பணக்காரர்களுக்கு மட்டும் தான் வங்கி என்ற மாயையை போக்கி ஏழை , எளியவர்களுக்கும் வங்கி சேவை தேவை என்று தான் ஜன் தன் திட்டம் மூலம் 23 கோடி பேருக்கு துவங்கப்பட்டு அரசு சலுகைகள் அதன் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு பலன் அடைந்தவர்கள் பல கோடி பேர். இன்று பணக்காரர்களின் ஊது குழலாக பலர் பேட்டி கொடுக்கின்றனர் . வாங்கிய காசிற்கு கூவட்டும் . போன வருஷம் மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு BJP , RSS , விஜயகாந்த் , சீமான் மற்றும் பொதுமக்கள் தங்கள் கை காசினை இறக்கி சேவைகள் செய்தனர் கட்டுமரமோ , அம்மா கட்சியோ அல்ல . அவர்களுடைய பதுக்கிய, கருப்பு பணத்தை வெளுப்பாக்கி உங்களுக்கு சேரவேண்டிய உண்மையான பல நல திட்டங்களை , மானியங்களை இழக்காதீர்கள் மக்களே . அன்றும் நீங்கள் இப்படியே தான் இருக்க விரும்புகிறீர்களா ? முடிவு நம் கையில் . திருந்துவோம் , திருத்துவோம்

Rate this:
Indian-Tamilan - no,இந்தியா
19-நவ-201616:51:23 IST Report Abuse

Indian-Tamilanமக்கள் மோடி கூறுவதை எல்லாம் பழைய நாடக நடனங்களையே புதியவர்கள் ஆடி பாடி நடிக்கிறார்கள் என்று பார்ப்பதுடன் தற்போது மோடியால் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
19-நவ-201619:07:59 IST Report Abuse

Chandramoulliஉன்னை போன்ற டுபாக்கூர் தான் அல்லல்படுகிறார்கள் என்று தெரிகிறது . நடுத்தர மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு இயல்புக்கு வந்து விட்டனர் . ...

Rate this:
Indian-Tamilan - no,இந்தியா
19-நவ-201616:49:03 IST Report Abuse

Indian-Tamilanகருப்பு பணத்தை வைத்திருப்பவரைகளுக்கு எதிராக ஏற்கனவே எண்ணற்ற எச்சரிக்கைகள், தண்டிக்க சட்டங்கள் என கணக்கிலடங்காமல் உள்ளன. அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் நிறைய எச்சரிக்கைகள் உள்ளன. அதையும் மீறி இப்பொழுது இனியும் புதிய எச்சரிக்கைகள். மோடிதான் இந்திய அரசுக்கு புதியவர். பதுக்கல்காரர்கள் பல வருடம் அனுபவ சாலிகள். இதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது மோடி எதையாவது அதையே திரும்ப திரும்ப புதியது போல் கூறுவது குமுறுவது எதுவும் வெளிக்கு உதவாது.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
19-நவ-201619:09:28 IST Report Abuse

Chandramoulliசட்டம் இருந்து என்ன பயன் . ஒரு மாற்றமும் இல்லை . வரி காட்டுபவன் கட்டி கொண்டே இருக்கிறான் . அரசியல்வாதிகள் கொள்ளை அடித்து கும்மாளம் அடிக்கிறார்கள் உங்கள் வீட்டின் முன்பும் பின்பும் கூட . ...

Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X