தவித்த மக்களுக்கு இலவசமாக பசி போக்கிய 'அம்மா' உணவகம்

Added : டிச 06, 2016 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: மறைந்த, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த, 'அம்மா' உணவகங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு, இலவசமாக உணவளித்து, பசி போக்கின.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி அரங்கில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, அஞ்சலி செலுத்தினர். இரங்கல்
தவித்த மக்களுக்கு இலவசமாக பசி போக்கிய 'அம்மா' உணவகம்

சென்னை: மறைந்த, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த, 'அம்மா' உணவகங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு, இலவசமாக உணவளித்து, பசி போக்கின.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி அரங்கில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னையில் கடைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. இதனால், பசி போக்க வழியின்றி மக்கள் தவித்தனர். ஜெயலலிதா திறந்து வைத்த, அம்மா உணவகங்கள், அவர்களுக்கு கை கொடுத்தன. மாநகராட்சியில் உள்ள, 407 உணவங்களும், வழக்கத்தை விட சுறுசுறுப்புடன் இயங்கின. இங்கு, காலை, மதியம், இரவு என, மூன்று நேரங்களிலும், இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இது, அஞ்சலி செலுத்த வந்தோருக்கும், கடைகள் மூடப்பட்டதால் தவித்த மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. முதல்வரின் திட்டங்களில் பெரிதும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகங்கள், அவரது இறுதி நாளிலும், மக்களின் பசியாற்றும் சேவையை செய்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

CHANDRA GUPTHAN - doha,கத்தார்
07-டிச-201613:46:44 IST Report Abuse
CHANDRA GUPTHAN இறந்தவரை முன்னிட்டு செய்யப்படும் அன்னதானம் அவர்களுக்கு நற்கதியை தரும் . அந்த விதத்தில் ஜெ ரொம்ப கொடுத்துவைத்தவர் . நல்லது இது போல் நிறைய நடக்கவேண்டும் . பழைய படி தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேறவேண்டும் . வாழ்க வளர்க தமிழ் . ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
07-டிச-201613:34:14 IST Report Abuse
Rajendra Bupathi பரவாயில்லை மனித நேயமுள்ள செயல்?
Rate this:
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
07-டிச-201611:48:18 IST Report Abuse
p.manimaran இலவசமா உழைக்க கற்று கொடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X