பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இறுதி ஊர்வலம் அமைதி
போலீஸ் சிறப்பு ஏற்பாடு

சென்னை:போலீசார் எடுத்த சிறப்பான நடவடிக் கையால், மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் இறுதி ஊர்வலம், சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், அமைதியாக முடிந்தது.

இறுதி ஊர்வலம் அமைதி  போலீஸ் சிறப்பு ஏற்பாடு

ஜெயலலிதாவின் உடல், சென்னை, ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்திருந்தனர். சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்துக் கும், எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஜனாதிபதி, பிரதமர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வந்த போது,

அவர்களுக்கு,போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மாநிலம் முழுவதும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிகழாமல் இருக்க, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், பல அதிரடி உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வந்தார்.

அது போல், சென்னை போலீஸ்கமிஷனர், ஜார்ஜ், உயர் போலீஸ் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, பாதுகாப்பில் சிறு தொய்வு கூட ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்ட நேரத் தில் இருந்து, கமிஷனர் ஜார்ஜ், வீட்டுக்கு செல்லா மல், அப்பல்லோ மருத்துவமனை, போயஸ் கார்டன், ராஜாஜி அரங்கம் போன்ற இடங்களுக்கு சென்று, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமாக இருந்தார்.

இதனால், சிறு அசம்பாவித சம்பவம் கூட ஏற்பட வில்லை. அது போல, மாநில சட்டம் -ஒழுங்கு கூடு தல், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை கூடுதல் கமிஷனர் கள், தாமரை கண்ணன், சேஷசாயி, ஸ்ரீதர், சங்கர்; இணை கமிஷனர்கள், அன்பு, மனோகரன்; துணை கமிஷனர்கள், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார், சுதாகர் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள்,

Advertisement

இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த போதிலும், வௌியூரில் இருந்து வந்தவர்களுக் கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீ சாருக்கும், உணவு உள்ளிட்ட உதவிகளை, மக்கள் ஆர்வத்துடன் செய்து கொடுத்தனர். சமூக வலைதளங்களில் வௌியான பதிவுகள், இதற்கு பெரிதும் கை கொடுத்தன. ஜெயலலிதா வுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வசதிக் காக, தெற்கு ரயில்வே, சென்னை, கடற்கரை - திருமயிலை இடையே, 20 சிறப்பு ரயில்களை இயக்கியது.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
07-டிச-201618:58:39 IST Report Abuse

ezhumalaiyaanபாமரன் பதிவு உண்மையிலேயே பாமரனுடையது என்று நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
07-டிச-201618:57:13 IST Report Abuse

ezhumalaiyaanஎவ்வித அசம்பாவிதமுமின்றி நிலைமையை கையாண்ட காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அவர்கள் குழுமத்திற்கும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். இதற்கு ஒத்துழைத்த பொதுமக்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

Rate this:
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
07-டிச-201618:54:50 IST Report Abuse

Dr.R.Raveenthiranaath Nehru Ph.D.எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த மாநில சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி, கூடு தல், டி.ஜி.பி., திரிபாதி, கமிஷனர் ஜார்ஜ், சென்னை கூடுதல் கமிஷனர்கள், தாமரை கண்ணன், சேஷசாயி, ஸ்ரீதர், சங்கர் இணை கமிஷனர்கள், அன்பு, மனோகரன் துணை கமிஷனர்கள், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார், சுதாகர் அனைவருக்கும் பாராட்டுக்கள். . தங்களது புரட்சி தலைவியின் பிரிவினை தாங்கிக்கொண்டு யாருக்கும் தொந்தரவு செய்யாமல் துக்கம் அனுஷ்டித்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், அமைதி காத்த அனைத்து பொது மக்களுக்கும் நன்றி.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X