பதிவு செய்த நாள் :
டிஜிட்டல் முறை,  பணம் செலுத்துவோருக்கு ஜாக்பாட்,  1 கோடி ரூபாய், மத்திய அரசு அறிவிப்பு

'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது.

டிஜிட்டல் முறை,  பணம் செலுத்துவோருக்கு ஜாக்பாட்,  1 கோடி ரூபாய், மத்திய அரசு அறிவிப்பு

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவிக்கின்ற னர். வங்கிகளிலும், ஏ.டிஎம்.,களிலும், மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.
இதனால், 'ரொக்கமில்லாமல், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு முறையில், பரிவர்த் தனை செய்ய வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, குலுக்கல் மூலம் பரிசுகள்

வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, 'நிடி ஆயோக்' தலைமை செயல்அதிகாரி, அமிதாப் காந்த் கூறியதாவது: டிஜிட் டல் பரிவர்த்தனைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது; இதை, மேலும் ஊக்குவிக் கும் வகையில், குலுக்கல் முறை யில் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம். பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தனித்தனியாக பரிசு கள் வழங்கப்படும். மொத்தம், 340 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

கிறிஸ்துமஸ் தினமான, டிசம்பர், 25ல் இருந்து, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 50 முதல், 3,000 ரூபாய்க்குள் டிஜிட்டல் பரிமாற்றம் செய்பவர் கள், குலுக்கல் பரிசுக்கு தகுதியுடையவர்கள்; இதன்படி, தலா, 1,000 ரூபாய் பரிசு, 15 ஆயிரம் பேருக்கு, 100 நாட்களுக்கு வழங்கப்படும்.

இதைத் தவிர, வாரம் தோறும், 7,000 பரிசுகளும் வழங்கப்படும். அது போலவே, டிஜிட்டல் பரி வர்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர் களுக்கும் பரிசு வழங்கப்படும்; வாரந்தோறும், 7,000 வர்த்தகர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

இதை தவிர, 2016 நவம்பர், 8 முதல், 2017

Advertisement

ஏப்ரல், 13 வரை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்த பொதுமக்களில், மூன்று பேர் 'மெகா' பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் படுவர்.அவர்களில், முதல் பரிசு பெற்றவருக்கு, ஒரு கோடி ரூபாயும்; இரண்டா வது பரிசு பெற்றவருக்கு, 50 லட்சம் ரூபாயும்; மூன்றாவது பரிசு பெற்றவருக்கு, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ல், பரிசு பெறும் நபர்கள் பற்றிய அறி விப்பு வெளியாகும். இந்த பிரிவில், வர்த்தகர் களுக்கு, 50 லட்சம், 25 லட்சம், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று மெகா பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கெல்லாம் பரிசு


மத்திய அரசு அறிவித்துள்ள குலுக்கல் பரிசு திட்டம், தனியார், 'கிரெடிட் கார்டு' மற்றும் தனியார் நிறுவனங்களின், 'இ - வாலட்' மூலம் பணம் செலுத்துவோருக்கு பொருந்தாது. அதே நேரத்தில், யு.பி.ஐ., மற்றும் யு.எஸ்.எஸ்.டி., பரிவர்த்தனைகள், 'ரூபே' கார்டு ஆகியவற்றை பயன் படுத்துவோர், பரிசு பெற தகுதி உடையவர்கள்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
17-டிச-201609:47:28 IST Report Abuse

நிலாகள்ளப் பணம் ஒழிக்க முடியும் முடியாது என்று இரண்டு சீட்டுகள் எழுதி குலுக்கிபோட்டு முடிவுக்கு வாருங்கள் முதலில் நீங்கள் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்குள் எங்கள் ஆயுசு முடிந்துவிடும் போல்

Rate this:
Saran Krishnarajan - uppsala,சுவீடன்
16-டிச-201623:24:48 IST Report Abuse

Saran Krishnarajanஇந்தியாவில் முறையான டிஜிட்டல் பாதுகாப்பு இருக்கா? அப்படி வயதானவர்கள் இல்லை பாமரர்களோ பணம் தொலைத்தால் யாரு பாதுகாப்பு? அப்படி திருடு போனால் அரசு பொறுப்பேற்றுக்கொண்டு பணத்தை குடுத்து உதவுமா? இல்லை டிஜிட்டல் தோல்வி என்று ஒத்துக்கொண்டு கைவிடுமா? கார்டு துளைத்து போனாலோ இன்டர்நெட்டோ இல்லை உயிர் போகும் நேரத்திலோ அல்லது உச்ச போக கூட பணம் இல்லை என்றல் என்ன செய்வது?

Rate this:
Rajasekaran - Vizg,இந்தியா
16-டிச-201623:23:14 IST Report Abuse

Rajasekaranநான் எனது தொண்ணூறு சதவீத பணவர்த்தி ஆன்லைன் மூலமாகவே செலுத்திகிறேன். கடந்த மூன்று வருடங்களாக இன்று வரை எனக்கு எந்த கஷ்டம் இல்லை. பத்து சதவீதம் மக்கள் என்னிடம் சொன்னது. உங்களிடம் பணம் இல்லை என்றால் காசோலை அளியுங்கள் என்று, நான் நடு வர்கத்தை சேர்ந்தவன் என்னால் முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது குற்றம் சொல்வதற்கே ஒரு கூட்டம் உள்ளது இங்கே கருத்து தவறாக கூறிவியர்கள் தயவு செய்து ஒரு இந்தியனாக இருக்க விரும்புங்கள் நீங்கள் ஐரோப்பிய நாடுகளை உற்று நோக்குங்கள் அவர்கள் எப்படி பரிவர்தம் செய்கிறார்கள் என்று

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X