பதிவு செய்த நாள் :
தேர்தலில் சீட் வேண்டுமா?
5 கி.மீ., நடக்கணும்: காங்., அதிரடி அறிவிப்பு

டேராடூன்:அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்பவர்களுக்கு புது விதமான நிபந்தனை களை விதித்துள்ளது உத்தரகண்ட் மாநில, காங்கிரஸ்.

 தேர்தலில் சீட் வேண்டுமா? 5 கி.மீ., நடக்கணும்: காங்., அதிரடி அறிவிப்பு


முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வினோதமான நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்துள்ளது.

'சீட் கேட்பவர்கள், ஐந்து கி.மீ., துாரத்துக்கு நடக்க வேண்டும்; அந்தத் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேச வேண்டும். அதைத் தவிர, தொகுதியில் விரும்பிய ஒருவர் வீட்டில், ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும்' என, மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.

இது குறித்து உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலை வர் கிஷோர் உபாத்யாயா கூறியதாவது:

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நடை பயணத்தை மேற்கொண்டு, மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.அதே வழியில், கட்சியிலும் மக்களிடையேயும் நெருக்க மாக உள்ளவருக்கு சீட்வழங்கவே, ஐந்து, கி.மீ., நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, தொகுதியில் தங்களுக்கு விருப்பமான, ஏதாவது ஒரு வீட்டில், ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும். இதன் மூலம், தேர்தல்

Advertisement

பிரசாரத்தின்போது, அவர்கள் சிறப்பாக செயல் படுவதற்கு வாய்ப் பாக இருக்கும். ஹரித்துவா ரில், 19ல் துவங்கும் இந்த நடை பயண போட்டி, 70 தொகுதிகளிலும் நடத்தப்படும்.

இந்த போட்டியை அந்தந்த பகுதி, கட்சி நிர்வாகி கள் கண்காணிப்பர். இந்தப் போட்டி அனைவருக் கும் பொருந்தும். உடல்நலக் குறைவு அல்லது நடக்க முடியாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
19-டிச-201618:40:26 IST Report Abuse

Balajiஊழல் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருந்தால் யாருக்கு சீட் கொடுப்பது என்று பெருத்த போட்டி நிலவும் என்பதை புரிந்து வைத்துள்ளார்கள் போல அதனால் தான் இப்படியொரு அறிவிப்பு...... பார்க்கலாம் யார் இதையெல்லாம் செய்து தேர்வாகிறார்கள் என்று

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-டிச-201617:39:10 IST Report Abuse

Endrum Indian5 கி.மீ. நடக்க உங்களால் முடியாதா இப்பொழுதே அ.தி.மு.க. அல்லது குறைந்த பட்சம் தி.மு.கவில் சரணடையுங்கள். அதன் தலைவர்கள் தங்கள் சொந்த தொகுதிக்கே போவதில்லை என்ன வெள்ளம் வந்தாலும், சட்ட சபைக்கு கூட வருவதில்லை, வந்தாலும் ½ மணி நேரம் தான்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-டிச-201614:23:55 IST Report Abuse

இந்தியன் kumarகாந்திஜியின் கனவு விரைவில் இந்தியா முழுவதுவும் நனவாக வேண்டும் , ஊழல் காங்கிரஸ் கட்சி இனி தேசத்தை விட்டு விரட்ட பட வேண்டும்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X