'கறுப்பு பண ஒழிப்பு முயற்சி:மக்களுக்கு சுகமான சுமை'

Added : டிச 19, 2016 | கருத்துகள் (2) | |
Advertisement
தேனி;''கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை சாமானிய மக்கள் சுகமான சுமையாக கருதுகின்றனர்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த தைப்பொங்கலை ஜல்லிக்கட்டோடு நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நவ.8ல் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என

தேனி;''கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை சாமானிய மக்கள் சுகமான சுமையாக கருதுகின்றனர்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த தைப்பொங்கலை ஜல்லிக்கட்டோடு நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நவ.8ல் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை பல்வேறு

சிரமங்களை சாமானிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் அந்த சுமையை சுகமான சுமையாக கருதுகின்றனர்.

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு ,பண முதலாளிகள் அவர்கள் தன்மையில் இருந்து மாறவேண்டும். இதற்கு இதுபோன்ற நடவடிக்கை தேவையாக உள்ளது. இதை மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். சென்னையை தாக்கிய 'வர்தா' புயல் பாதிப்பிற்கு என்ன உதவி தேவையோ அதை பிரதமர் மோடி செய்வார், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

m.viswanathan - chennai,இந்தியா
19-டிச-201619:47:10 IST Report Abuse
m.viswanathan உங்களுக்கு வர போகும் தேர்தலில் நாங்கள் அளிக்க போகும் ஓட்டும் சுகமான சுமை ஆக இருக்க போகிறது
Rate this:
Cancel
ananda - thirunelveli,இந்தியா
19-டிச-201610:55:45 IST Report Abuse
ananda அமைச்சர் பெருமக்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்வதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மறந்து விடக்கூடாது வெளி நாட்டில் பணம் அச்சிடப்பட்டு கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன எனவே 1000 மற்றும் 500 நோட்டுக்களை வாபஸ் பெறுகிறோம் என அரசு அறிவித்தது என்னவாயிற்று கள்ள பணம் எல்லாம் டெப்பாசிட் செய்யப்பட்டு நல்ல நோட்டுகளாக மாறிவிட்டன அரசுக்கு கணிசமான நஷ்டம் என்பதை மறுக்கின்றனர். தற்போது பண பரிவர்த்தனையை நிறுத்திவிட்டு எல்லாமே மின்னணு கார்டு பரிமாற்றத்துக்கு மாற்றுவதாக கருத்து தெறிவிக்கின்றனர். ஆனால் இது நடுத்தர மற்றும் ஏழைகள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் பெரும் பண பரிவர்த்தனை பெரும் கமிஷன் வியாபாரிகளுக்கு முதலாளிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பது தெளிவான உண்மை வங்கிகள் பொதுமக்களின் பணத்தை பெரும் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து விட்டு மக்களின் அனுமதி இன்றி கடனை ரத்து அல்லது தள்ளுபடி செய்வது எந்த விதத்தில் நியாயம் பொதுமக்களை நெருக்கி பணம் வசூலிக்கும் வங்கிகள் பெரும் முதலைகளின் பணத்துக்கு தள்ளுபடி மற்றும் பரிவு காட்டுவது என்ன? அரசை கெஞ்சி நிற்பது என்ன அரசும் வேடிக்கை பார்த்து ரசிப்பது என்ன இந்த அராஜகம் முதலாவது நிறுத்தப் பட வேண்டும், நமது பணத்தை நாம் செலவழிக்க நமது விருப்பத்தின் படி ரொக்கமாக தர மறுப்பது அடிமைத்தனத்திற்கு வித்திடும் இதை எல்லாம் அறிந்தும் அரசியல் தலைவர்கள் இந்த விதமான பாதகங்களை சப்பு கொட்டுவது நியாயமல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X