பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மேல்மட்ட தலைவர்கள் தப்ப கூடாது: ஸ்டாலின்

சென்னை:'ராமமோகன ராவ் விவகாரத்தில், மேல்மட்டத் தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறிஉள்ளார்.
அவரது அறிக்கை:

 மேல்மட்ட தலைவர்கள் தப்ப கூடாது: ஸ்டாலின்

தலைமை செயலகம் என்பது கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என,

அரசியல் சட்ட அதிகாரம் படைத்த, அனைவரும் பணியாற்றும் இடம். அங்கே சோதனை நடத்தப் பட்டிருப்பது, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது அல்ல.

சீர்குலைவு


இந்த சோதனையின்போது, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக போலீஸ் துறையின் மதிப்பு, மரியாதை சீர்குலைந்து விட்டது. ராமமோகன ராவ் மீதான சோதனை குறித்த தகவல் கள் அனைத்தையும், எவ்வித தாமதமும் இன்றி, மாநில அரசுக்கு, வருமான வரித்துறை அனுப்பி வைக்க வேண்டும்.

விரிவான அறிக்கை


அதுமட்டுமின்றி, இந்த ஊழலில் தொடர்புடைய,

Advertisement

மேல்மட்ட தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது. இந்த சோதனை கள் குறித்து, முதல்வர் விரிவான அறிக்கை வாயிலாக, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
24-டிச-201622:10:16 IST Report Abuse

Dr.C.S.Rangarajanராம் மோகன் ராவ் அலுவலகம் மற்றும் அவர் வீடு என பல இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கருதி வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். 'ராமமோகன ராவ் விவகாரத்தில், மேல்மட்டத் தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் அவர்களின் கருத்திற்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ராம் மோகன் ராவ் அவர்களுக்கு 'திடீர் சோதனைக்குபின் 'திடீர் மார்வலி' வந்து மருத்துவமனையில் உள்ளார். மேல்மட்டத் தலைவர்கள் 'விஞ்ஞான முறையில்' பல இக்கட்டிலிருந்து தப்பியது வரலாறு. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல், 'ஒரு கதவை திறந்தால், பலகதவுகளை மூட' தெரியாத மூடர்களா நம் மேல்மட்டத் தலைவர்கள்?

Rate this:
Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201619:47:41 IST Report Abuse

Munnamalaiகீழ் மட்டத்திலுள்ளவர்கள் தப்பினால் பரவாயில்லையா? கீழ் மட்டத்தினர் கொஞ்சம் குறைவாக கொள்ளையடித்தாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிற்றே ?

Rate this:
rajan. - kerala,இந்தியா
24-டிச-201619:38:05 IST Report Abuse

rajan.  ஸ்டாலின் எதிர்கட்சிகளின் மீது என்னமா போபர்ஸ் பீரங்கியால தாக்குகிறார் ? உடாதீர் உங்க குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் வாழ்த்துகள் .

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X