ம.ந., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., திடீர் விலகல்

Added : டிச 27, 2016 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலர், வைகோ அறிவித்துள்ளார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய, நான்கு கட்சிகள் இணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினபிரதமர் மோடி வெளியிட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, ம.தி.மு.க., ஆதரித்தது. ஆனால், மக்கள் நலக்
ம.ந., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., திடீர் விலகல்

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகுவதாக, அக்கட்சியின் பொதுச்

செயலர், வைகோ அறிவித்துள்ளார்.


கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய, நான்கு கட்சிகள் இணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின

பிரதமர் மோடி வெளியிட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, ம.தி.மு.க., ஆதரித்தது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள, மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, புதுச்சேரி யில், இன்று நடக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு, வைகோ அழைக்கப்படவில்லை.அதனால், அதிருப்தி அடைந்த வைகோ, மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேற, முடிவு செய்துள்ளார்.


சென்னையில், நேற்று அவர் கூறுகையில், ''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகிக் கொள்கிறது. அதேநேரத்தில், அதில் உள்ள கட்சிகளுடனான நட்பு தொடரும்,'' என்றார்.


திருமாவளவன் கூறுகையில், ''இனி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (33)

POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
29-டிச-201601:52:02 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA முதலில் எதிர்த்து நிற்பவர்களை எவ்வளவு குறைசொல்ல முடியுமோ அவ்வளவு சொல்ல வேண்டியது. அடுத்த முறை அவர்களிடமே கூட்டணி வைக்க வேண்டியது. இவரை பிடித்து ஜெயலலிதா தேவை இல்லாமல் ஜெயிலில் போட்டார் .அப்போது இவரை வெளியில் கொண்டு வர யாருமே முயற்சி செய்ய வில்லை .அப்போது கருணாநிதி போய் ஜெயிலில் பார்த்தார்.பிறகு கடும் முயற்சி செய்து வெளியில் கொண்டு வந்தார்.வைகோ பரோலில் வந்து முரசொலி மாறன் மரணத்தில் கருணாநிதி காலடியில் இருந்து அழுதது, அந்த காமடி வேற நடந்தது. வெளியில் வந்ததும் ஜெயலலிதாவை அழிக்காமல் விட மாட்டேன்.இது என் சபதம்.அண்ணா மீது ஆணை என சத்தியம் செய்தார் .பிறகு வந்த தேர்தலில் 3 சீட்டுக்காக கருணாநிதியை எதிர்த்து வெளியில் வந்தார் .அப்போது ஜெயலலிதா வெற்றிபெற இவரே காரணமானார் .அதோடு இவரது அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகி விட்டது .வில்லாய் நிற்பதும், பிறகு விலை போவதும் இவருக்கு கை வந்த கலை. பாவம் வைகோ .
Rate this:
Cancel
antony raj - tirunelveli,இந்தியா
28-டிச-201620:36:20 IST Report Abuse
antony raj அரசியலில் இருந்து ஒரேயடியாக விலகிவிடுவது மிகவும் நல்லது.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
28-டிச-201618:18:38 IST Report Abuse
இந்தியன் kumar நான் கட்சிக்காரன் கிடையாது, எந்த கட்சியின் உறுப்பினரும் கிடையாது. கடந்த 30 ஆண்டுகளாக வைகோவை அறிவேன் , திமுகவுக்காக அவர் உழைத்த உழைப்பையும் அறிவேன் , தனக்கு பின் தன் தமையன் வந்து விட முடியாது என்ற பயத்தினால் தான் கலைஞர் கொலைப்பழி சுமத்தி வைகோவை வெளியேற்றினார். நான்கு தொண்டர்கள் உயிர் நீத்தனர், எட்டு மாவட்ட செயலாளர்கள் வெளியேறினர், MGR க்கு கூட இந்த அளவு வெளியேற வில்லை 1994 இடை தேர்தலில் பெருந்துறையில் இரண்டாம் இடம் பெற்றது திமுக ஆதரவு கம்யூனிஸ்ட் மூன்றாம் இடம் நல்ல செல்வாக்கு இருந்தது 1996 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தனி அணியாக நின்றது , அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் வெற்றியை திமுக வசப்படுத்தியது விளாத்தி குளத்தில் 750 வாக்குகளில் வைகோ தோற்கடிக்க பட்டார் தோற்கடித்தவர் திமுகவின் ரவி சங்கர் , தற்போது இவர் போலி incomtax ஆஃபீசராக நடித்து உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அன்றே நல்லவர் தோற்கடிக்க பட்டார்.திமுக ஆசை வார்த்தை கூறி மதிமுகவை கரைக்க ஆரம்பித்தது 1997 இல் வேறு வழி இல்லாமல் , ஊழல் ராணியோடு கைகோர்த்தார் வைகோ செய்த மிக பெரிய தவறு அதுதான் , அதன் பின்பு பாஜக அணியில் அதிமுக கழன்று திமுக சேர்ந்தது , திமுக எப்படி மதிமுகவை வாழவைக்கும் 2001 தேர்தலில் திமுக ஒதுக்கியது வேறு வழி இல்லாமல் தனித்து களம் கண்டது , மீண்டும் தோல்வி காரணம் பண பலம் இரண்டு ஊழல் கட்சிகள் தவிர வேறு யாரும் தனித்து களம் காண முடியாது , இரண்டு ஊழல் கழகத்தையும் எதிர்த்து மக்கள் நல கூட்டணியை அமைத்தார் விஜயகாந்தின் சொதப்பலால் படு தோல்வி . வைகோ நினைத்திருந்தால் பாஜகவுடன் அனுசரணையாக இருந்து 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ஆகி இருக்கலாம் , ராஜபக்ஷேயை விவகாரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறினார் ,ஒரு நல்ல தலைவர் திமுகவின் பண பலத்தால் மோசமாக சித்தரிக்க பட்டு உள்ளார் , வாஜ்பாய் மந்திரி பதவி கொடுக்க முன் வந்தபோதும் தான் எற்காமல் தன் சகாக்களுக்கு கொடுத்து அழகு பார்த்தவர் , 2004 தேர்தலில் தான் போட்டி இடாமல் தன் சகாவை நிப்பாட்டி வெற்றி பெற வைத்தவர். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளுக்கு முல்லை பெரியார், காவிரி நதி நீர் ,நியூட்ரினோ , அணு உலை ஸ்டெர்லிட் , மது விலக்கு போன்ற பிரச்சினைகளுக்கு போராடியவர் நல்ல ஒரு போராளியை நீங்கள் மோசமாக சித்தரித்தது கஷ்டமாக இருக்கிறது, நிறைய பேர் மோசமாகத்தான் விமரிசிக்கின்றனர் , இறைவன் அருள் இருந்தால் தான் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும் , வைகோவை மோசமாக சித்தரிப்பதால் இழப்பு அவருக்கு இல்லை நமக்குத்தான் , காலம் தான் பதில் சொல்லும் நல்லதை நினைப்போம் நல்லது நடக்கட்டும் வாழ்க பாரதம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X