மாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்

Updated : பிப் 13, 2017 | Added : பிப் 13, 2017 | கருத்துகள் (4) | |
Advertisement
மேலுார்:மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர்.சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின் அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார். தினமும் கிராமப்புற அரசு
மாணவர்களை தேடிச்சென்று பாடம்   தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்

மேலுார்:மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர்.

சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின்
அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார்.

தினமும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அட்டைகளை கரும்பலகையில் ஒட்டி
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பாடம் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுக்கிறார். பலன் தரும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்.

தவிர, படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சிறை கைதியாக இருந்து விடுதலை பெறுவோர் அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கவும் வழிகாட்டு கிறார். பாடம் நடத்த செல்லும் பள்ளிகளில் மருத்துவ குணம் நிறைந்த மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
தினமலர் நாளிதழில் சட்டம் சார்ந்து வரக்கூடிய செய்திகளை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்காமல் மாணவர்களை தேடி சென்று தன்னம்பிக்கை வளர்த்து வரும் இவரை பாராட்ட

98656 22602.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

A. Sivakumar. - Chennai,இந்தியா
13-பிப்-201720:42:05 IST Report Abuse
A. Sivakumar. முதுமையில் பயனுள்ள வாழ்வு. கிரேட் மனிதர்
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
13-பிப்-201706:42:03 IST Report Abuse
மு. செந்தமிழன் மென்மேலும் உங்கள் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
13-பிப்-201704:23:41 IST Report Abuse
Siva Panchalingam இதுதான் உண்மையான, தன்னலம் கருதாத, ஆத்மாத்தமான ஒரு சேவை. ஒரு முன் உதாரணமான பெரியவர். வாழ்த்துக்கள்.
Rate this:
13-பிப்-201720:53:13 IST Report Abuse
kumaravelmuruganvalka valamudan...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X