2,000 மது கடைகளை மூட உத்தரவு; 500ஐ மட்டும் மூடுவதாக அரசு நாடகம்

Added : பிப் 23, 2017 | கருத்துகள் (30) | |
Advertisement
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டி உள்ளது. ஆனால், 500 கடைகளை மட்டும் மூட உத்தரவிட்டு, மக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 6,800க்கும் அதிகமான மதுக் கடைகள் இருந்தன. தேர்தலின் போது, மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோஷம் ஒலித்தது.
2,000 மது கடைகளை மூட உத்தரவு; 500ஐ மட்டும் மூடுவதாக அரசு நாடகம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டி உள்ளது. ஆனால், 500 கடைகளை மட்டும் மூட உத்தரவிட்டு, மக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 6,800க்கும் அதிகமான மதுக் கடைகள் இருந்தன. தேர்தலின் போது, மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோஷம் ஒலித்தது. 'ஆட்சிக்கு வந்தால், மதுக் கடைகள், படிப்படியாக மூடப்படும்' என, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது.இதன்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், 500 மதுக் கடைகளை மூட, முதல்வராக இருந்த, ஜெ., உத்தரவு பிறப்பித்தார். அதன்பின், அவர் மரணமடையும் வரை, கூடுதலாக மதுக் கடைகள் எதுவும் மூடப்படவில்லை.



இதற்கிடையில் விபத்துகள் தொடர்பான, பொது நல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர், விபத்தில் இறப்பதையும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளையும் சுட்டிக் காட்டியது. மேலும், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடைகளின் லைசென்ஸ்களை, மார்ச் 31க்கு பின் புதுப்பிக்கக் கூடாது' என, டிச., 15ல் உத்தரவிட்டது. இதன்படி கணக்கிட்டால், தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டியிருக்கும்; ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும், தமிழக அரசு துவக்கியதாகத் தெரியவில்லை.



இந்நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி, மேலும், 500 மதுக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். சுப்ரீம்கோர்ட் உத்தரவின் படியும், தேர்தல் வாக்குறுதியின் படியும், குறைந்தபட்சம், 1,000 மதுக் கடைகளையாவது, இந்த நிதியாண்டு இறுதிக்குள் மூட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.த ற்போது, வெறும், 500 மதுக் கடைகளை மூடுவதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டையும், அ.தி.மு.க.,வுக் கு ஓட்டளித்த மக்களையும் ஏமாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடு முடிய, மார்ச் 31 வரை அவகாசம் இருக்கிறது; அதனால், அடுத்த மாதத்துக்குள், மேலும், 1,000 மதுக் கடைகளை மூட வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு உள்ளது; தவறும் பட்சத்தில், பொது மக்களுக்கு மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.



- நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (30)

Thamizhan - Pondy,இந்தியா
24-பிப்-201700:47:58 IST Report Abuse
Thamizhan வெஷம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் , மொத்தமா மூடவேண்டியதுதானேய்யா . எவ்வளவோ குடும்பங்க இதனால சீரழியிது . உங்களுக்கு புண்ணியமா போகும் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-201716:23:12 IST Report Abuse
Endrum Indian ஏமாற்றுவது என்பது அ.தி.மு.கவின் அஜெண்டா எனப்படும் அடிப்படைக்கொள்கை. அதை யாராலும் மாற்ற முடியாது. 500 மூடப்படும்? மூடப்பட்டது அல்ல? நன்றாக கூர்ந்து பார்த்தால் 500 ல் 100 மூடப்பட்டது மற்றவை இடம் மாற்றப்பட்டது என்று தெரியும் பிறகு.
Rate this:
Cancel
23-பிப்-201713:03:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை மட்டும் மூட சொல்லியது , அதற்கு லைசன்ஸ் நீட்டிப்பு கூடாது என்றது, ஆனால் அதற்கு மாற்றமாக வேறுஇடத்தில் அதே அளவில் கடை திறக்க கூடாது என்று சொல்லவில்லையே ? அந்த ஓட்டை போதாதா இவர்களுக்கு. மூடப்படும் 2000 கடைகளுக்கு நிகராக அதற்கு மிக அருகில் உள்ள கிராமங்களில் கடைகள் திறக்கப்படும் அதாவது நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் , கூடவே வழிகாட்டிகள் வைக்கப்படும் வருபவர்களில் வசதிக்காக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் உண்மையான நோக்கம் நிறைவேற வாய்ப்பே இல்லை. தாரமாக குடித்துவிட்டு வண்டி ஓட்டலாம். தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு, சின்னம்மாவுக்கு வருவாய் இழப்பு என்றால் பொறுத்து கொள்வார்களா? இந்த 500 கடை மூடுவதென்பது கண்துடைப்பு தான். எல்லாமே கல்லா காட்டாத கடைகளாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X