ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இங்கு, பசு வதை தடுப்புச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
நரேந்திர மோடி, 2011ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பசுவை கொல்பவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டது.
தற்போதைய இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பசு வதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும்.