பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாரா கடன்களை வசூலிக்கும்
அவசர சட்டம் அமலுக்கு வந்தது

புதுடில்லி:வங்கித் துறையை பெரிதும் பாதித்து வரும், வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிகள் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம், கடன் வாங்கி செலுத்தாமல் ஏமாற்றியவர்களுக்கு கடிவாளம் போடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

 வாரா, கடன், வசூலிக்க, அவசர, சட்டம், அமல்

கடன் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்று வோரால், வங்கிகளின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த, சில ஆண்டுகளில் வங்கிக ளின் வாராக் கடன் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.

இத னால், வங்கிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 2016, டிச., 31

நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக் கடன், ஏழு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வாராக் கடனை வசூலிக்க வங்கிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்க, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், வங்கிகள் கட்டுப் பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக, அவசர சட்டம் கொண்டு வரு வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த,3ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத் துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, இந்த அவசர சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை நேற்று
வெளியிடப்பட்டது.இந்த அவசர சட்டத்தின்படி, கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை செலுத்தா மல் ஏமாற்றி வரும் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, குறிப்பிட்ட வங்கிக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். அதன்படி, குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவனங் கள் திவாலானவர்களாக

Advertisement

அறிவிக்கப்பட்டு, அவர்க ளுடைய சொத்துக் களை வலுக்கட்டாய மாக பறி முதல் செய்து, கடனை வசூலிக்க முடியும். மேலும் திவாலான வராக அறிவிக் கப்பட்டவர், எந்த ஒரு நிறு வனத்தின் இயக்குனர் குழுவிலும் இடம்பெற முடியாது.

இதுவரை, வாராக் கடனை வசூலிக்க, வங்கிகளுக் கான பொதுவான விதிமுறை களையே ரிசர்வ் வங்கி அறிவித்து வந்தது. அவசர சட்டத்தின்படி, குறிப்பிட்டகடனுக்கு ஏற்ப, அந்த வங்கிக்கு, அதில் எப்படி செயல்பட வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். வங்கி களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனித் தனிக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும், அதற்கு உறுப்பினர் களை நியமிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும் வழக்கு களில், மத்திய அரசும் நேரடியாக தலையிட்டு, ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்க முடியும்.

இந்த அவசர சட்டத்தின் மூலம், வங்கிக் கடன்களை வாங்கி, அதை செலுத்தாதவர்கள், வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர் களுக்கு எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கும் கடிவாளம், ரிசர்வ் வங்கிக்கு கிடைத்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
06-மே-201712:33:52 IST Report Abuse

Balajiஇதெல்லாம் நல்லாத் தான் இருக்கு....... ஆனால் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல தெரியவில்லையே........ நமக்கு தெரிந்தது மல்லையா மட்டும் தான், இவனைப் போன்று இன்னும் பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்கும் (சமீபத்தில் கூட ஒரு லிஸ்ட் தினமலரில் வந்தது) நபர்கள் பட்டியலை அனைத்து ஊடகங்களுக்கும் கொடுத்து அவர்களது முகவரி தலைமை நிர்வாகி போன்றோரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வெளியிட வேண்டும் ........ இதனால் இவர்கள் மானமிழந்து கடனை கட்டிவிடுவார்கள் என்பதற்காக அல்ல...... அவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும்....... இருந்தாலும் மக்களுக்கு இவர்களைப்பற்றி தெரிவிப்பது அரசின் கடமையாகும்........ இனியாவது கோடிகளில் கடனளிக்கும் முன் அனைத்துவிதமான விதிகளை வங்கிகள் பின்பற்றுமேயானால் சரி........

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
06-மே-201711:11:30 IST Report Abuse

Needhiyin Pakkam Nil இந்த சட்டத்தின் மூலம் கல்விக்கடன் விவசாய கடன் பெற்ற சாதாரண மக்களை இவர்கள் இனிமேல் வெளிப்படையாக துவைத்து எடுப்பார்கள். பல ஆயிரம் கோடி கடன் வாங்கியவன் எல்லாம் அரசியல் அதிகார பின்புலம் கொண்ட பண முதலைகள், எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் அவர்களை ஒன்னும் செய்ய முடியாது. கட்சிகளுக்கு தேர்தல் நிதியும் இதிலிருந்து தான் கொடுக்க படுகிறது எனவே பண முதலைகளின் கடன் எப்போதுமே வரா கடன் தான் அது ஒரு போதும் வராத கடன் தான். மத்திய அரசின் அதிரடி சட்டம் எல்லாம் அப்புறம் போடலாம், கல்விக்கடன் பெற்றவர்களில் புகைபடங்களை வாங்கி வாசலில் ஒட்டி கேவலப்படுத்துகிறீர்களே கோடிகளில் கடன் வாங்கிய பண முதலைகளின் பெயர்களை கூட வெளியிட மறுப்பது ஏன்..............?

Rate this:
dharma - chennai,இந்தியா
06-மே-201709:11:42 IST Report Abuse

dharmaநம் பிரதமரின் செயல்கள் ஏதோ அதிரடி மாற்றம் ஏற்படுத்துவது போல் நல்ல நடவடிக்கை எடுப்பது போல் தெரியும் (ஓப்பனிங் நல்லா இருக்கும்(மாதிரி தெரியும் ) பினிஷிங் சரியா இருக்காது ) ஆனால் பெரிதாக ஏதும் நடந்து விடாது. இவ்வளவு பேசுகிறார்களே கடன் வாங்கியவன் பட்டியலை வெளியிட முதல்ல தைரியம் இருக்கா ? சட்டங்களும் விதிகளும் பெரிதாக இருந்து என்ன பயன். அதை செயல்படுத்துபவர்கள் குமாரசாமியாக இருக்கிறார்கள். தப்பி தவறி சகாயம் மாதிரி ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் அவரை பந்தாடி விடுகிறார்கள். அல்லது செய்ய விடுவதில்லை.கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா இருக்கிறது முன்பு நன்றாக செயலாதது. ஏனென்றால் அப்போ சந்தோஷ் ஹெக்டே இருந்தார். ஆனால் இப்போ ஒரு குமாரசாமி இருக்கிறார். ஒரு நடவடிக்கையும் இல்லை. முன்பு தலைமை நீதிபதி தாகூர் இருந்தால் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தார். ஆனால் இப்போ. அதனால் சட்டங்கள் விதிகள் இருந்து என்ன பிரயோஜனம்.பணமதிப்பிழப்பு நேரத்தில் ஊழல் செய்த எத்தனை ரிசர்வ் வாங்கி அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதுனு கேளுங்க வாய் திறக்க மாட்டார்கள்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X