விரைவில் சட்டசபை தேர்தல் : பன்னீர் பரபரப்பு பேச்சு
விரைவில் சட்டசபை தேர்தல் : பன்னீர் பரபரப்பு பேச்சு

விரைவில் சட்டசபை தேர்தல் : பன்னீர் பரபரப்பு பேச்சு

Added : மே 06, 2017 | கருத்துகள் (8) | |
Advertisement
''பழனிசாமி அணியினர் நாடகமாடுகின்றனர். இந்த ஓரங்க நாடகத்தில் இருந்து விடுதலை பெற, சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, வெளியேற வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட, பன்னீர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழக அரசு உறக்க நிலையில் உள்ளது. அதற்கு வழிகாட்ட, இந்த பயணத்தை துவக்கி உள்ளோம். ஜெ.,
விரைவில் சட்டசபை தேர்தல் : பன்னீர் பரபரப்பு பேச்சு

''பழனிசாமி அணியினர் நாடகமாடுகின்றனர். இந்த ஓரங்க நாடகத்தில் இருந்து விடுதலை பெற, சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, வெளியேற வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட, பன்னீர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தமிழக அரசு உறக்க நிலையில் உள்ளது. அதற்கு வழிகாட்ட, இந்த பயணத்தை துவக்கி உள்ளோம். ஜெ., காண்பித்த லட்சிய பாதையில் இருந்து, தடம் மாறியவர்களை, மீண்டும் கொண்டு செல்ல, புனித பயணத்தை துவக்கி உள்ளோம்.தமிழக அரசு, இன்று பினாமி அரசாக
உள்ளது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாகக் கூறினர். அதற்கேற்ப, அவர்கள் செயல் இல்லை. இன்னமும் பொதுச்செயலராக சசிகலா, துணை பொதுச்செயலராக தினகரன் உள்ளனர். இந்த நிலை இருக்கும் போது, அவர்களை ஒதுக்கி வைத்தீர்கள் என்று எப்படி கூற முடியும். இதை நம்ப, மக்கள் ஏமாளிகள் அல்ல. இந்த ஓரங்க நாடகத்தில் இருந்து, முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்றால், சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, கட்சியை விடுவிக்க வேண்டும். முதலில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., கூறிய பாதையில் வருவர் என, நம்பினோம். ஆனால், அதற்கான அறிகுறி தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் முதலில் வருமா;
சட்டசபை தேர்தல் வருமா என பட்டிமன்றம் நடக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும்,
எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைகளை, மக்களிடம் ஏந்திச் செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்றால், எப்படி நடப்போம் என வாக்குறுதி அளிப்போம். முதலில், சட்டசபை தேர்தல் வரவும்
வாய்ப்புள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

பேனர்கள் அகற்றம் : சென்னை அடுத்த கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பன்னீர்செல்வத்தை வரவேற்று, சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, கொட்டிவாக்கம் வரை, பன்னீர் அணியினர், 'டிஜிட்டல்' பேனர்கள் வைத்திருந்தனர்; கொடி, தோரணம் கட்டியிருந்தனர்.போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை, அனுமதி பெறவில்லை எனக் கூறி அகற்றினர். இதற்கு, பன்னீர் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (8)

06-மே-201717:49:20 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஊழல் அடிமைகளும் ஊழல் ரவுடிகளும் தேவை இல்லை , மக்கள் சேவகர்கள் இனிமேல் பொறுப்புக்கு வரட்டும்.
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
06-மே-201709:42:37 IST Report Abuse
muthu Rajendran அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் எதிலும் காசு இல்லாlமல் ஒரு காரியமும் நடைபெறாத நிலையை எதிர்த்து மக்கள் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறார்கள். தேர்தல் வருமானால் இவர்களுக்கு சரியான முடிவை கொடுப்பார்கள். அது மட்டுமல்ல இனி வரும் கட்சி எதுவாக இருந்தாலும் லஞ்சம் கேட்கப்படும் இடங்களில் சாதாரண மக்கள் ஆர்ப்பரித்து போராடும் விழிப்புணர்வும் வளர்ந்திருக்கிறது. முழுக்க முழுக்க ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட தலைவர்களை இன்னும் எப்படி தைரியமாக தெய்வம் , குலசாமி தியாகத் தலைவி என்று இரு அணிகளும் மக்கள் மத்தியில் பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது
Rate this:
SANKAR - calgary,கனடா
06-மே-201718:52:27 IST Report Abuse
SANKARவெட்கம்,மானம்,மனசாட்சி இல்லாதவர்கள்......
Rate this:
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
06-மே-201709:21:46 IST Report Abuse
A shanmugam சட்டசபைக்கு கூடிய விரைவில் நீங்க சொல்வதுபோல் தேர்தல் வந்தால் நீங்க எல்லாம் "முகவரி" இல்லாமல் போய்வீடுவீங்க.
Rate this:
06-மே-201717:47:58 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM )நல்லது நடக்கட்டும் , குற்றவாளிகளின் ஆட்சி தேவை இல்லை . அம்மாஜி உயிரோடு இருந்தால் தற்போது சிறையில் தானே இருப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X