கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்

கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்

Updated : மே 06, 2017 | Added : மே 06, 2017 | கருத்துகள் (107) | |
Advertisement
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பல்வேறு
கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி அழைப்பு விடுத்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல், அடுத்து வரும் தேர்தல்கள் உள்ளிட்டவைகள் குறித்த பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


பாட்னாவில் நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை சந்தித்து கனிமொழி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று (மே 06) காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் கனிமொழி சந்திப்பார் என கூறப்படுகிறது. கனிமொழி நேரிலும், ஸ்டாலின் போன் மூலமாகவும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள நிதிஷ்குமாரும், லாலு பிரசாத்தும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (107)

Renga Naayagi - Delhi,இந்தியா
09-மே-201705:13:39 IST Report Abuse
Renga Naayagi பேசாம மோதி காலில் விழுவது தான் பெட்டர் ..
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
06-மே-201722:15:19 IST Report Abuse
m.viswanathan என்ன மாறுதல் வர போகிறதோ இறைவனுக்கு தான் தெரியும்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-மே-201719:02:53 IST Report Abuse
மலரின் மகள் முதலில் கேப்டனை ஷாம்லியுங்கள். முதியவர் பழம் கனிந்து பாலில் விழும் என்று காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போய்விட்டனவாம். கண்குளிர கேப்டனை பார்க்கட்டும், காதுகுளிர கேப்டன் குரல் கேட்கட்டும். கண்கள் பணித்து, காதில் தேன்வந்து பாயட்டும். இதயம் இனிக்கட்டும். அந்த இயற்கை மாதா அருள் புரிவாள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X