அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை
கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்?

'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு, சரியில்லை, கவர்னர், அறிக்கையால், அரசுக்கு, சிக்கல்?

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது.

தேர்தல் ரத்து


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அ.தி.மு.க., முக்கிய

நிர்வாகிகள், வீட்டில் சோதனை நடத்தினர். அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின. பணம் பட்டுவாடாவில், முதல்வர் பழனிசாமி உட்பட, 7 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதற் கான, ஆதாரங்களும் கிடைத்துள் ளன. ஜெயலலிதா வின், கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை நடந்தது. இந்த கொலை வழக்கின், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட, டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிர் இழந்தார்.

பரபரப்பு


அவரது நண்பர், சயான் விபத்தில் சிக்கி, கோவை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இது பற்றிய விபரங்களை தொகுத்து, தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு, அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, அரசியல் வட்டாரங் களில் கூறப்படுவதாவது:

கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி கொலையான தும்,அதைத்தொடர்ந்து நடந்த பல சம்பவங்களும், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந் துள்ளதையே காட்டுகின்றன. பெங்களூரு சிறை யில் உள்ள சசிகலாவின் வழிகாட்டுதலில் தான், தமிழக அரசு நிர்வாகம் செயல்படு கிறது. இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சமாக கொடுக்க இருந்த, பல கோடி ரூபாய் பணத்தை, நான்கு அமைச்சர்கள்,

Advertisement

ஹவாலா மூலமாக தர திட்ட மிட்டிருந்தனர். இது போன்ற விபரங்கள் எல்லாம், கவர்னர் அறிக்கையில் சுட்டி காட்டப் பட்டு உள்ளதாக தெரிகிறது.

நெருக்கடி


ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவில், முதல்வர், அமைச்சர்களுக்கு தொடர்பு; வருமான வரித் துறை சோதனை; அமைச்சர்கள் மீது வழக்கு, விசாரணை என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, கவர்னர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் அறிக்கை வாயிலாக, பழனிசாமி அரசுக்கு, புதிய சிக்கல் வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
08-மே-201722:02:06 IST Report Abuse

ganeshaஏய்யா இப்படி கூவரை. சரியா உங்க வோட்டு பிஜேபிக்கு போடாதீங்க. ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க உங்க வோட்டை நீங்க யாருக்கு போட்டாலும் அந்த கட்சி பிஜேபி க்கு சப்போர்ட் பண்ணி தான் ஆகணும் ஏனென்றால் அவ்வளவு கடன் வாங்கி யுள்ளது தமிழ்நாட்டு அரசு. மேலும் சாராய கடையெல்லாமும் மூடவேண்டியதினால் வருமானத்துக்கு உங்க அரசு எங்க போகும். மதிய அரசுக்கு பணிந்து தான் நடக்கணும். இந்த விஷயத்தெய் முதலில் தெரிஞ்சுக்கோங்க. பிஜேபி சொல்படி உங்க கட்சியும் ஆட்சியையும் கேட்டு தான் ஆகணும். . உங்களுக்கு உங்க கட்சியே உங்களுக்கு தெரியாமல் ஆப்பு தான் வைக்கும். இதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்க.

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
08-மே-201719:33:36 IST Report Abuse

ganeshaஹலோ, மூணு வயசுக்கு மேல மூளை வளராதவங்களே, நீங்க என்னவோ பிஜேபி க்கு எதிராக இவ்வளவு பேசுகிறீர்களே, பிஜேபி ஏய் இங்கு வர விடமாட்டோம் என்று ர்சொல்கிறீகளே. இது எல்லாம் வேஸ்ட் அப்பா. உங்கள் கட்சி பிஜேபி க்கு வால் புடிக்குது. அவுங்களே பிஜேபி ஏய் எதிர்த்து பேச சொல்லுங்க பாப்போம். பிஜேபி க்கு அவர்கள் வால் புடிச்சு தான் ஆகணும். அவ்வளவு ஊழல் பண்ணி இருக்ககங்க. உங்க முதலமைச்சரே பிஜேபி க்கு எதிராக பேசாதீங்க என்று அமைச்சர்களை கட்டிப்போட்டு உள்ளார்கள். அதனால் பிஜேபி க்கு உங்க சப்போர்ட் வேண்டவே வேண்டாம். உங்க ஆட்சி ஆளர்களே வேணாம் வேண்டாம் என்று சொன்னால் கூட தானாகவே சப்போர்ட் பண்ணுகிறார்கள். த்ராணி முதுகெலும்பு இல்லாதவர்கள் மடியில் அவ்வளவு கணம் இருக்கு. பிஜேபி வைப்பது தான் இங்கு சட்டம். தெரிஞ்சுக்கோங்க. நீங்க பாட்டுக்கு வேஸ்ட் ஆக இங்கே கூவிக்குனே இருங்க. யார் வேண்டாம் என்றது. நீங்க எல்லாம் நீங்கள் ஆதரிக்கும் காட்சியிலேயே ஒரு டம்மி பீஸ் ஆக்கப்பட்டுளீர்கள். இப்படி கூவரத்துக்கு பதிலாக நீங்க ஏதாவது வேலையை பாருங்க. உறுப்புடறதுக்கு வழி தேடுங்க.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
08-மே-201718:21:51 IST Report Abuse

Balajiஒவ்வொரு அடியாக படிப்படியாக மத்திய அரசு தமிழக அரசை கலைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...... ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை...... ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தினாலும் மக்கள் தங்களுக்கு வாக்களித்து எப்படி ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை........ மத்தியில் எடுப்பதெல்லாம் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதை தமிழக மக்கள் எப்படி அதற்குள் மறந்து பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை..........

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
08-மே-201722:20:47 IST Report Abuse

ganeshaபிஜேபி ஏன் ஐயா இந்த ஆட்சியை கலைக்கணம். உங்க அரசு பிஜேபி கிட்ட மண்டி இட்டு கிடக்கு. . பிஜேபி என்ன பைத்தியமா ஏன்யா இந்த மண்டியிட்டு இருக்கும் இந்த ஆட்சியை கலைக்கணம்ு. வடிவேல் சொல்ற மாதிரி இது நல்லாத்தானே போயிட்டு இருக்கு. ...

Rate this:
மண்ணாந்தை - Raichur,இந்தியா
08-மே-201723:32:22 IST Report Abuse

மண்ணாந்தைமிக சரி. ஒரு ஸ்பீட் போஸ்ட் டெலிவரி விஷயமா டிராக் பண்ண டோல் பிரீ நம்பருக்கு போன் பண்ணினா ஹிந்தில பேசுறாங்க. ஹிந்தி தெரியாதுங்க கொஞ்சம் இங்கிலீஷ் ல கேளுங்கன்னு சொன்னா பட்டுன்னு போனை வைச்சுட்டாங்க. இந்த அவலத்தை எங்கே போய் சொல்ல. ...

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X