ஜனாதிபதி காரை நிறுத்திய எஸ்.ஐ., : உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (23) | |
Advertisement
பெங்களூரு: நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் செல்வதற்காக, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரை, பொது மக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மெட்ரோ ரயில் பசுமை வழித்தட போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூரு
ஜனாதிபதி காரை நிறுத்திய எஸ்.ஐ., : உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு

பெங்களூரு: நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் செல்வதற்காக, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரை, பொது மக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மெட்ரோ ரயில் பசுமை வழித்தட போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூரு வந்திருந்தார். ஜனாதிபதியின் கான்வாய், கவர்னர் மாளிகை நோக்கி வரும் வழியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், போக்குவரத்து போலீஸ், எஸ்.ஐ., நிஜலிங்கப்பா ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஏற்பட்ட வாகன நெரிசலில், நோயாளியை ஏற்றி வந்த ஒரு ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிக்கியது. இதைப்பார்த்த நிஜலிங்கப்பா, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார்.
ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தைரியமாக, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்திய நிஜலிங்கப்பாவை, பொது மக்கள் பாராட்டினர். ஜனாதிபதி வரும் நேரத்தில், சாமர்த்தியமாக செயல்பட்ட, எஸ்.ஐ., நிஜலிங்கப்பாவை, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி, பரிசு வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

Manikandan.M - DINDIGUL,இந்தியா
21-ஜூன்-201721:25:47 IST Report Abuse
Manikandan.M பாராட்டுகிறேன்.
Rate this:
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201720:51:13 IST Report Abuse
HoustonRaja துணிச்சலான, மனிதாபமிக்க செயல் - பாராட்டிற்குரியது. ஆனால், இதுவே முதலமைச்சரோ (அல்லது போலீஸ்/வேறு அமைச்சரோ) தமது படை பரிவாரங்களுடன் வந்திருந்தால் நிறுத்தியிருப்பாரா? அப்படியே இவர் செய்தாலும், அவர்கள் நின்று இருப்பார்களா?? பரிசாக என்ன கிடைத்திருக்கும்? துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை அல்லது இடைநீக்கம் (வேறு காரணத்தை காட்டி). கவர்னர், ப்ரெசிடெண்ட் இவர்கள் எல்லாம் "விழா நாயகர்கள் தான்" என்று எல்லோருக்கும் தெரியும் (அவர்களே உட்பட).
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜூன்-201718:27:39 IST Report Abuse
D.Ambujavalli மானுடம் இன்னும் வாழுதிங்கே வாழ்த்துக்கள் எஸ் ஐ சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X