இளைஞர்களின் வழிகாட்டி

Added : நவ 23, 2017 | கருத்துகள் (10) | |
Advertisement
இன்றைய நவீன யுகத்தில் சொகுசு வாழ்க்கையை விரும்பும் உலகில், தகுதி இருந்தும், எளிமையாக மற்றும் இளைஞர்களின் வழிகாட்டியாக திகிழ்கிறார் 85 வயது இளைஞர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் சம்பாஜி பைடே,85,. எம்.எஸ்., அணு அறிவியல் தங்கப்பதக்கம் பெற்றவர். தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 67
இளைஞர்களின் வழிகாட்டி

இன்றைய நவீன யுகத்தில் சொகுசு வாழ்க்கையை விரும்பும் உலகில், தகுதி இருந்தும், எளிமையாக மற்றும் இளைஞர்களின் வழிகாட்டியாக திகிழ்கிறார் 85 வயது இளைஞர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் சம்பாஜி பைடே,85,. எம்.எஸ்., அணு அறிவியல் தங்கப்பதக்கம் பெற்றவர்.

தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 67 மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் வழிகாட்டுதல் குழுவில் பணியாற்றிய ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.விஞ்ஞானிகள், பிரபல அரசியல்வாதிகள், ஆய்வு மாணவர்கள் என பலரும் இவருக்கும் பழக்கம். இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், இதுவரை யாரிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. மேலும் இன்று சாதாரணமானவர்கள் கூட கார் வைத்துள்ளனர்.

ஆனால் இவர் சைக்கிளில் மட்டுமே வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் காலில் செருப்பு கூட அணியாமல் நடந்தே செல்வார். கதர் துணியை மட்டும் அணிவார். மகாராஷ்டிர மக்களிடம் மிக பிரபலமானவர்.தற்போது ஒரு அமைப்பை தொடங்கி சமூக சேவையில் ஈடுபடுகிறார். குருஜி என அழைக்கப்படும் இவரை 10 லட்சம் இளைஞர்கள் பின்தொடர்கின்றனர். சாகும் வரை நாட்டுக்காக உழைப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, இவரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201712:06:31 IST Report Abuse
Ushadevan மாணவர்களின் இன்னொரு கலாம் . வணக்கம் பாராட்டுக்கள். பெருமையுடன்.
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
23-நவ-201711:43:52 IST Report Abuse
vns கோமாளிகள் மனநிலை குன்றியவர்கள் ஜெய்ஹிந்துபுரம் என்ற பெயரில் அபத்தமான அருவருக்கத்தக்க அறிவில்லாமல் எழுதுகின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் ஹிந்துக்களுக்கு எதிராகவும் நாடு மற்றும் அரசுக்கு எதிராக உள்ளன. ஒருதலைபடச்சமான இதுபோன்ற கருத்துக்களை தினமலர் வெளியிடக்கூடாது என்பது வாசகனாகிய என்னுடைய கருத்திட்டு. ஒரு ஹிந்து விரோதக்கருத்து எல்லா ஹிந்துக்களை பாதிக்கின்றது என்பதை தினமலர் அறிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
23-நவ-201717:00:01 IST Report Abuse
Aravindh Ramanஇந்துக்கு எதிராக ஒண்ணுமே சொல்ல படவில்லையே? மோடிக்கு எதிரான கருத்து அல்லது பா ஜ க விற்கு எதிரான கருத்து என்றால் இந்துக்கு எதிரானது என்று எடுத்து கொள்ள வேண்டும் என்பது அறியாமை. ஆட்சியில் இருப்போர் விமர்சனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாது அதற்காக இந்து கோஷம் எழுப்புவது முற்றிலும் அறியாமையே அன்றி வேறொன்றுமல்ல....
Rate this:
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
23-நவ-201710:10:11 IST Report Abuse
R.SUGUMAR வாழ்க வளமுடன் . தங்கள் பணி ( தொண்டு நிறுவனம் )சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X