தேவாரம், பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 18 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
தேவாரம் அருகே பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டுக்கான போட்டி மார்ச் 18-ல் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ஊராட்சி நாடகமேடை அருகே வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வி.ஐ.பி., மேடை அமைக்கும் பணி இந்த வாரம் துவங்குகிறது.
கிராம நாட்டாண்மை வீரவல்லவன் கூறுகையில், ''மாசி நோன்பு நாளையுடன் முடிவடைகிறது. மார்ச் 3ல் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் துவங்கும். இந்தாண்டு 700 காளைகள் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளது,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE