சென்னை: காவிரி விவகாரத்தில் டில்லி கூட்டத்தில் வைக்கப்பட்ட அரசின் வாதங்களை வெளியிட வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் கால தாமதம், குழப்பம் ஏற்படுவதை தடுக்க சட்ட மன்றத்தை கூட்ட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் இல்லை என நீர்வளத்துறை செயலாளர் கூறியதற்கு கண்டனங்ளை தெரிவிக்கிறேன். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி துவக்கத்திலிருந்தே மத்திய பா.ஜ., அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. தமிழக விவசாயிகளை திசை திருப்பி குழப்பி வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE