ஜோத்பூர்: சல்மான் கான் மீதான ஜாமின் மனுவை ஒத்தி வைத்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஜோத்பூர் சிறையில், அடைக்கப்பட்டார்.
தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. சல்மான் சார்பிலும், அரசு சார்பிலும் நீண்ட விவாதம் நடந்தது. இருதரப்பு வாதத்துக்கு பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஓருவர். இவர் ஜோத்பூரில் இருந்து சிரோக் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே வேறு நீதிபதி பொறுப்பேற்கும் வரை சல்மான், சிறைவாசம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement