லண்டன் : லண்டனில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி, நாட்டில் சமீபத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எப்போது நடந்திருந்தாலும் பலாத்காரம், பலாத்காரம் தான். அது பொறுத்துக் கொள்ள முடியாதது. இதில் யார் ஆட்சியில் அதிக பலாத்காரங்கள் நடந்தது என ஒப்பிடுவது மோசமானது. பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என அனைவரும் தங்களின் மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய பேசிய மோடி, நாங்கள் அமைதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதே சமயம் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியர்களை கொல்ல பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு புரியும் மொழியிலேயே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE