சட்ராஸ் எஸ்.ஐ., அறிவுரை பேச்சு; போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு

Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (10) | |
Advertisement
காஞ்சிபுரம்: ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளிடையே, விபத்து குறித்து தெளிவாக அறிவுரை கூறிய, காவல் உதவி ஆய்வாளரின் பேச்சு, 'பேஸ்புக்' பக்கத்தில், பதிவு செய்யப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உயதிரகாரிகள் பலரும், அந்த காவல் உதவி ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏப்., 23 முதல், 29 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.காவல் துறையும், வட்டார
சட்ராஸ் எஸ்.ஐ., அறிவுரை பேச்சு; போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு

காஞ்சிபுரம்: ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளிடையே, விபத்து குறித்து தெளிவாக அறிவுரை கூறிய, காவல் உதவி ஆய்வாளரின் பேச்சு, 'பேஸ்புக்' பக்கத்தில், பதிவு செய்யப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உயதிரகாரிகள் பலரும், அந்த காவல் உதவி ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏப்., 23 முதல், 29 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்
படுகிறது.காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து, மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு பற்றியும், விபத்து மற்றும் அதன் விளைவுகள் பற்றியும் வாகன ஓட்டிகளிடையே எடுத்து கூறி வருகின்றனர்.

சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும், உதவி ஆய்வாளர், முத்துக்குமார், கடந்த 24ல், சதுரங்கப்பட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அபராதம் வசூலிப்பதை தவிர்த்து, விபத்து குறித்த விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தார்.

'விபத்து ஏற்படும் போது முதலில் தலையில் தான் அடிபடும்; உயிர் போனால் திரும்ப கிடைக்காது' என தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளை கட்டாயமாக ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினார்.அவரது பேச்சு, அங்கிருந்த வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், ஒரு தாளில், இனி ஹெல்மெட் அணிந்து தான் வண்டி ஓட்டுவேன் என, பத்து முறை எழுதி வாங்கிய பின்னர், அங்கிருந்து அனுப்பியுள்ளார்.



அவரது அறிவுரை பேச்சு, காவல் துறை பேஸ்புக் பக்கத்திலும், வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, பலரால் பகிரப்பட்டு வருகிறது. காவல்துறை உயரதிகாரிகள் பலரும், உதவி ஆய்வாளரை பாராட்டிஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

NagaRajan - Nagercoil,இந்தியா
05-மே-201813:04:46 IST Report Abuse
NagaRajan போலீஸ்காரர்களை நண்பனாக பார்க்க அதிலுள்ள 50 % பேர் மாறினால் கூட போதும் ,எங்க ஊர்ப்பக்கம் இருக்கும் இருக்கும் திமுககாரன் மேலே நிறைய கேஸ் இருக்கு ,போன மாசம் கூட தற்கொலைக்கு காரணமா இருந்தான்ன்னு கேஸ் போட்டாங்க ,ஆனா இப்ப வெளியே பிரியா சுத்துறான் ,எல்லாம் காசு செய்யுற வேலை ,தண்டனை கடுமையாக இருந்தா இவனைமாதிரி ஆளுங்க எப்படி தப்புபண்ணுவாங்க .
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
28-ஏப்-201818:15:55 IST Report Abuse
Varun Ramesh 'சட்ராஸ்', என்றால் என்ன?
Rate this:
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
28-ஏப்-201817:03:48 IST Report Abuse
Ramesh kavalthuraiyinar helmet aniyadhavarkku abaradham podamal malivu vilayil nall helmettai spottileye virkalame. idhanaal veruppunarchi kurayum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X