லாலு பிரசாத் யாதவின் பினாமி சொத்துகள் முடக்கம்
லாலு பிரசாத் யாதவின் பினாமி சொத்துகள் முடக்கம்

லாலு பிரசாத் யாதவின் பினாமி சொத்துகள் முடக்கம்

Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (12) | |
Advertisement
பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின், பினாமி சொத்துகளை, வருமான வரித்துறை முடக்கியது.முறைகேடு : பீஹார் மாநில முன்னாள் முதல்வரான, லாலு பிரசாத் யாதவ், 2004 - 2009ம் ஆண்டுகளில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே ஓட்டல்களை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டல் குத்தகை தருவதற்காக,
லாலு பிரசாத் யாதவின் பினாமி சொத்துகள் முடக்கம்

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின், பினாமி சொத்துகளை, வருமான வரித்துறை முடக்கியது.


முறைகேடு :


பீஹார் மாநில முன்னாள் முதல்வரான, லாலு பிரசாத் யாதவ், 2004 - 2009ம் ஆண்டுகளில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே ஓட்டல்களை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டல் குத்தகை தருவதற்காக, பாட்னா நகரில், ஷேக்புரா என்ற இடத்தில், 3 ஏக்கர் நிலம், லாலு குடும்பத்தினருக்கு லஞ்சமாக தரப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.



இந்த இடத்தில், 'பேர்குரோ ஹோல்டிங்' என்ற நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியைத் துவங்கியது. அந்த நிறுவன இயக்குனர்களாக இருப்பவர்கள், லாலுவின் குடும்பத்தினர் என்பதால், அந்த இடத்தை, அமலாக்கத்துறை முடக்கியது. அதையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.




உத்தரவு :


இந்நிலையில், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை, வருமான வரித்துறையும் முடக்கி, உத்தரவு பிறப்பித்துஉள்ளது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற, லாலு பிரசாத் யாதவ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (12)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
28-ஏப்-201818:20:40 IST Report Abuse
Loganathaiyyan சே அவமானம் அக்கிரமம் இந்த ஒரு பிசாத்து நிலத்தை முடக்கம் செய்தது? என்னிடம் இருப்பது ரூ.35 ,000 கோடி அது யாருக்கும் தெரியாதே- லாலுவின் மைண்ட் வாயிஸ்.
Rate this:
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஏப்-201813:08:43 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தமிழ் நாட்டிலும் பல அரசியவாதிகள், மற்றும் அரசு அதிகாரிகளின் பினாமி சொத்துக்களை முடக்கினால் நல்லது...
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
28-ஏப்-201809:58:20 IST Report Abuse
rajan.  இந்த ஊழல் அரசியல்வாதியை வச்சு தான் சட்டம் மற்ற முறைத்தவரும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். எந்த ஒரு ஊழல் அரசியல்வாதியும் இந்த ஒரு நாசத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்பது தான் இயற்கையின் விதியும் கூட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X