சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் இனி தூக்கு?
சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் இனி தூக்கு?

சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் இனி தூக்கு?

Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி,12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, துாக்குதண்டனை விதிக்கும் அவசர
சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் இனி தூக்கு?

புதுடில்லி: சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி,12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, துாக்குதண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.



இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கும், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இது பற்றி, மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு, பார்லிமென்டில் ஆறு வாரத்துக்குள் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையெனில், அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அந்த சட்டத்துக்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் போது, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்வோருக்கும், மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்தமும், அதில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஏப்-201803:18:58 IST Report Abuse
Mani . V பதிமூன்று வயது குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்று பனிரெண்டு வயது என்று தீர்மானித்தார்கள் என்றே புரியவில்லை. உங்களுக்கு புரிந்ததா?
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
28-ஏப்-201815:43:05 IST Report Abuse
சுந்தரம் நேத்திக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வகுப்பு அறையில் தாகம் எடுத்ததால் ஆசிரியர் அனுமதி இன்றி தண்ணீர் குடித்து உள்ளார். அனுமதி இன்றி தண்ணீர் குடித்ததால் மாணவரை திலீப் குமார் சைனி என்ற ஆங்கில ஆசிரியர் பிரம்பால் 14 முறை அடித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் பெற்றோரிடம் கூறி கதறி அழுதி உள்ளார்.இந்த ஆசிரியருக்கு பிரமோஷனை தூக்கி கொடுப்பாங்களா?
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
28-ஏப்-201815:08:37 IST Report Abuse
Pasupathi Subbian இவர்கள் ஒன்னும் செய்யவே வேணாம் , எங்ககிட்ட விட்டுவிடுங்கள் . நீங்க தலையிடவே வேணாம். நீதி விசாரணை , தண்டனை உடனே வழங்கப்படும். அங்கே ரெண்டுமாசம், இங்கே ஆறுமாசம் என்று இழுத்துகிட்டு வேலையே இல்லை . வெட்டு ஒன்னு துண்டு இரண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X