சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உரிய விதிகள் வகுக்கப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடந்தது. வழக்கை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி , அப்துல் குத்தூஸ் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
நீதிபதிகள் தங்களின் அறிவுரையில்; அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படையான தன்மை வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அரசு வக்கீல் நியமனம் செய்யக்கூடாது. விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களை மட்டுமே அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும். அறிவித்த விதிகள் நியமன விதிகளாகவே உள்ளது. நியமனத்திற்கான விதிமுறைகள் அரசு வகுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE