கம்பம், திருச்சியில் நடந்த மாநில மல்யுத்த போட்டிகளில் கம்பம் பகுதி பள்ளி மாணவர்கள், தங்கப் பதக்கம் பெற்று சாதனைபடைத்துள்ளனர். அவர்களை தலைமை ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.திருச்சியில் மாநில அளவிலான 'கிராப்ளிங்' மல்யுத்த போட்டிகள் மே 10ல் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 184 பங்கேற்றனர். வயது, எடை பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளை மாநில கூட்டுறவு சங்கதேர்தல் ஆணையர் ராஜேந்திரன் துவக்கி வைத் தார். இதில் தேனி மாவட்டத்திலிருந்துபயிற்சியாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் 7 பேர் கலந்து கொண்டனர்.கம்பம் எஸ்.பி.எம். ஜெய்டெக் இன்டர்நேஷனல் பள்ளி 9 ம் வகுப்பு மாணவர் மோகன்பாபு, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்.மேல்நிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவர் தீபக், 6 ம் வகுப்பு மாணவி சுருதி, உத்தமபாளையம் பாத்திமா உயர்நிலைப்பள்ளி மாணவி செரினா, ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி மாணவி கனி என்ற நாகரத்தினம் ஆகியோர் வெற்றி பெற்று தங்க பதக்கங்களை பெற்றனர். கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் முரளி தங்கம் பெற்றார். வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு மாநில 'கிராப்ளிங்' மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் விக்டர் குழந்தைராஜ் தங்க பதக்கங்களை வழங்கினார்.அவர்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர். அவர்கள் மே 25 ல்நாசிக் நகரில் நடக்கும் தேசிய மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE