திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில்தொடங்கப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு பணி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் நாகரீகம் குறித்து மத்திய தொல்லியல்துறை 3 கட்ட அகழாய்வை முடித்து விட்டது. தமிழக தொல்லியல் துறை சார்பில் 4ம் கட்ட அகழாய்வு 55 லட்சரூபாய் செலவில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. சில நாட்களிலேயே மழை தொடங்கியதால் பணி மந்த நிலையில் நடந்து வந்தது. 20 குழிகள் முதல் கட்டமாக தோண்டப்பட்டு அகழாய்வுநடந்தது.
மாநில தொல்லியல் துறை அகழாய்வில் வெளிப்படை தன்மை இல்லை. மாலையில் மழை பெய்து வருவதால் அதிகாரிகள் பெயரளவிற்கு தினசரி வந்து செல்கின்றனர். அகழாய்விற்காக தோண்டப்பட்டகுழிகளையும் தார்ப்பாயால் மூடி வைத்துள்ளனர். அகழாய்வு குறித்து அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் எதுவும் தெரிவிப்பதில்லை.
மாநில தொல்லியல் துறை அகழாய்வில் வெளிப்படை தன்மை இல்லை. மாலையில் மழை பெய்து வருவதால் அதிகாரிகள் பெயரளவிற்கு தினசரி வந்து செல்கின்றனர். அகழாய்விற்காக தோண்டப்பட்டகுழிகளையும் தார்ப்பாயால் மூடி வைத்துள்ளனர். அகழாய்வு குறித்து அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் எதுவும் தெரிவிப்பதில்லை.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement