பள்ளிக்கு 'சீதனம்' வழங்கிய பெற்றோர்

Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (6) | |
Advertisement
காரைக்குடி: அரசு பள்ளிக்கு, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மாணவர்களின் பெற்றோர், 'சீதனமாக' வழங்கினர். காரைக்குடி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், 'கல்வி சீர்' வழங்கும் விழா நேற்று நடந்தது. நடப்பாண்டில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு தேவையான பொருட்களை, தலைச்சுமையாக, பூ, பழங்களுடன்
பள்ளிக்கு  'சீதனம்' வழங்கிய பெற்றோர்

காரைக்குடி: அரசு பள்ளிக்கு, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மாணவர்களின் பெற்றோர், 'சீதனமாக' வழங்கினர். காரைக்குடி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், 'கல்வி சீர்' வழங்கும் விழா நேற்று நடந்தது. நடப்பாண்டில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு தேவையான பொருட்களை, தலைச்சுமையாக, பூ, பழங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர். பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். டெஸ்க், பெஞ்ச், பலகை, ஸ்டீல் சேர், பிளாஸ்டிக் வாளி, குப்பைதொட்டி, செஸ் அட்டை, பிரிண்டர், மடிக்கணினி, கணினி மேஜை, சேர், சுவர் கடிகாரம், புரஜெக்டர் ஸ்கிரீன், ஸ்டீல் அலமாரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பள்ளிக்கு சீதனமாக வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-201812:14:52 IST Report Abuse
Bhaskaran பள்ளியை நிர்வாகமும் பெற்றோர்களும் கவனித்துக்கொள்வார்கள் கல்வியை ஆசிரியர்கள் கண்ணும்கருத்துமாய் சொல்லிக்கொடுத்து இளையதலைமுறையை முன்னுக்கு கொண்டுவருவதை ஒரு தவமாக செய்யுங்கள்
Rate this:
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
10-ஜூன்-201822:17:54 IST Report Abuse
Kuppuswamykesavan எது எப்படி இருந்தாலும், இந்த, பரந்த மனதின் சொந்தக்காரர்களை, பாராட்டியே ஆகனுங்க நாம்.
Rate this:
Cancel
R.Hariharasubramanian - Chennai,இந்தியா
10-ஜூன்-201812:50:58 IST Report Abuse
R.Hariharasubramanian அதெல்லாம் சரி, அரசாங்கம் என்று ஒன்றும் பள்ளிக்கல்வித்துறை என்ற ஒன்றும் என்ன செய்கிறது? வாங்கும் வரியும், கல்விக்கு ஒதுக்கும் பணமும் எங்கே போகிறது? அரசு பள்ளிகளில் பின் எப்படி மாணவ, மாணவியர் சேர்க்கை நிகழும்? அரசின் பங்கு என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X