ரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து

Updated : ஜூன் 23, 2018 | Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி, :திரிபுராவில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றிய தந்தை - மகளுக்கு, அம்மாநில அமைச்சர், தன் வீட்டில் விருந்தளித்து, நன்றி தெரிவித்தார்.திரிபுராவில், முதல்வர், பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர், ஸ்வபன் தேவ் வர்மா, 45. இவர், தன் வீட்டு
ரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து

புதுடில்லி, :திரிபுராவில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றிய தந்தை - மகளுக்கு, அம்மாநில அமைச்சர், தன் வீட்டில் விருந்தளித்து, நன்றி தெரிவித்தார்.

திரிபுராவில், முதல்வர், பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர், ஸ்வபன் தேவ் வர்மா, 45.

இவர், தன் வீட்டு அருகே உள்ள ரயில் பாதை வழியே, தன் மகள் சோமதிஉடன் நடந்து சென்றார். அப்போது, பலத்த மழை பெய்தது.




தப்பினர்



இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் ரயில் வந்தது. இதைப் பார்த்த ஸ்வபன் தேவ் வர்மாவும், அவரது மகளும், உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி, ரயிலை நிறுத்தும்படி, தண்டவாளத்தில் நின்று, சைகை செய்தனர்.இதைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த, 2,000 பயணியர் உயிர் தப்பினர்.

இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர், திரிபுரா சட்டசபைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டசபையில், அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



பரிந்துரை


தந்தை - மகள் இருவரது தீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு சன்மானம் வழங்கும்படி, முதல்வர் பிப்லப் குமார் தேவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உதவியும், சன்மானமும் வழங்கும்படி, ரயில்வே அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், திரிபுராவின் சுகாதாரத்துறை அமைச்சர், சுதீப் ராய் வர்மன், தந்தை - மகளின் வீரத்தை பாராட்டி, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, காலை சிற்றுண்டி அளித்து, நன்றி தெரிவித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
23-ஜூன்-201818:03:35 IST Report Abuse
THINAKAREN KARAMANI தெய்வம் மனிதரூபத்தில் - தந்தையும் மகளுமாக - வந்து ஆயிரக்கணக்கான விலைமதிக்க முடியாத மனித உயிர்களைக் காப்பற்றியுள்ளது. அந்த இருவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்படியாக அரசு அவர்களுக்கு நிறையச் செய்ய வேண்டும் . திரிபுராவின் சுகாதாரத்துறை அமைச்சர், திரு சுதீப் ராய் வர்மன், அவர்கள் தந்தை - மகளின் வீரத்தைப் பாராட்டி, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, காலை சிற்றுண்டி அளித்து, நன்றி தெரிவித்தார். அவர், அவர்களுக்கு விருந்து அளித்த விடியோவை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். அப்போது அந்த அமைச்சர் அவர்கள் அந்தக் குழந்தைக்கு மிகவும் அன்போடு தன் கையாலேயே உணவை ஊட்டிவிட்டார். அவரின் அன்புக்கும் என் வணக்கங்களையும் , அந்த தந்தை - மகள் இருவரின் அரிய செயலுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். THINAKAREN KARMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
sulochana - chennai,ஆஸ்திரேலியா
23-ஜூன்-201817:47:08 IST Report Abuse
sulochana வாழ்த்துக்கள். அந்த பயணியர் மொத்தபேரும் சேர்ந்து உடனே ஒரு தொகை சேர்த்து கொடுத்திருக்க வேண்டும் அன்பளிப்பாக, நிச்சயமாக ரயில் வே யில் பணி தர வேண்டும், குழந்தை படிப்பு செலவு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பெரிய மதிய உணவு கொடுப்பதை விட்டு காலை சிற்றுண்டியாம்.
Rate this:
Cancel
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-201815:12:38 IST Report Abuse
Rajesh manidha vadivil ulla deivangal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X