காஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 24, 2018 | Added : ஜூன் 24, 2018 | கருத்துகள் (29) | |
ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில், சதர் பன் பகுதியில், ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரு தரப்பிற்கு இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக மாநில போலீஸ் டிஜிபி
காஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில், சதர் பன் பகுதியில், ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரு தரப்பிற்கு இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.

இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக மாநில போலீஸ் டிஜிபி கூறியுள்ளார். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்திடம் சரணடைந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

குல்காம் பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X